சூரியன் உதயம் மற்றும் மறைவிற்கே
பெயர் போன இடம் இன்று இந்த
பெளர்ணமியில் அந்த மின்
விளக்குகளை தாண்டி என்னை விட
யார் இந்த வானில் ஜோலிக்க முடியும்
என்று இரவை தனதாக்கி கடலில்
மிதக்கிறது நிலவு கப்பலோடு ...
இந்த இரண்டு இடங்களும் இரு
கண்கள் போல் கம்பீரமாக
நிற்க.கொந்தளிக்கும் கடல் அலைகள்
ஒன்றல்ல மூன்றின் சங்கமம். எந்த
நிலையிலும் மனதை அமைதி
படுத்தினாலே வெற்றி என்று ஒரு
மகானும், இன்னொருவர் இதன்
துணை கொண்டு எதையும் வெல்ல
முடியும் என்று எழுத்தாணியுடன்
உலகமே போற்றும் பொதுமறை
இருக்க...ஓயாமல் ஓடும் அலைகளை
பார்க்க பார்க்க மூன்று கடல்கள்
அழகாக கண் முன்னே பரவி கிடக்க
இதை விட வாழ்வின் எல்லையை
யாரும் தொட்டாலும் இவற்றின்
துணையுடன் வழி நடக்க வேறென்ன
வேண்டும் என மன நிறைவுடன் பிரிய
முடியாமல் விடை பெற்றோம் .



(கதிரவனின்) மறைவையும் ரசிக்கும் பொழுதே இவ்விடம், யாருக்கும் இழப்பு இல்லையென்பதால். அழகே எழுத்தும் படங்களும் வித்யா
ReplyDeleteநன்றி வீணா
ReplyDelete