Thursday, September 21, 2023

எங்கு போவீர் by Vidhya Nivash


 

கரைபுரண்டோடும் ஆற்று நீர் பரந்து, 

  விரிந்து, நெளிந்து ஓடும்

தண்ணீர்.எங்கு போவீர் !முதலும்

 முடிவும் காண கூட வரவா!

அதன் ஓடும் சத்தம் கேட்க கேட்க எதோ

 செய்கிறது.நிலைக்கொள்ளாமல்

ஓடும் நீரும் மனமும் சேர்ந்து 

சங்கமமாக எங்கும் நிசப்தம்.காவேரி

 ஓடும் பாதை எங்கும் அதன் தடத்தை

 நுகரமுடியும்.இரு மருங்கிலும்

 மரங்களின் பேச்சு கசகசக்க. அதுவே

 வறட்சியில் சொல்லமுடிய

 அவலம்.என்றும் விரிந்து, பரந்து ஓட

 வாழ்த்துகிறேன் நீண்டு நெடுந்தூரம்

 ஓடு ஓய்வு இல்லாமல் ஓடி பட்டி தொட்டி

 நிறைய வாழ்த்துகிறேன்.

2 comments:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...