காரிருள்..
உன்னை..
ஏறெடுத்து ஏக்கத்துடன் ....
நாங்கள் நோக்க..!..
நீயோ ..
சற்று முன் அங்கேயும்..
இதோ..
இப்போது - இங்கேயும் ..
என பாசாங்கு..
செய்வது தான் முறையோ?!!.
நீ ..
கார்மேகமா இல்லை
வெறும் கனவா ...
கண் திறந்ததும் -
கலைந்து போக ??!!!
கொஞ்சம் - நாங்கள்
இளைப்பாற..
ஓர் இடத்தில் நின்று ..
கருணை காட்டு -
காதல் செய் -
எங்கள் மேல் ...
மழை கவிதை வார்த்து!!!
கார்மேக கள்வனே...!!!!...
விடிந்ததில் இருந்து..
இன்னும் வடியாமல்..
அடம் பிடித்தபடி ..
தலைக்கு மேல் வலம் வரும் ..கார்மேக
கண்ணனுக்கு ..ஒரு ஆசை மடல் 👆..

அருமை கிருத்திகா
ReplyDelete