குஞ்சுகளின் மன ஓட்டம் இறப்பிலே
தாலாட்டு பாட தாயில்லை
பசியாற்ற தந்தையில்லை
தேடினாலும் பக்கத்தில் உணவில்லை
காத்து நிற்க நண்பனின் கரமில்லை
அறிந்த மனதிற்கு உணர்வில்லை
வசந்தம் வருமோ? வயிறு நிரம்புமோ? வாழ்வில் சந்ததி கிடைக்குமோ?
என்ற ஏக்கத்தில் தூக்கத்திலேயே உயிர் விட்ட பறவைக் குஞ்சுகள், நிறைவேறாத கனவுகளோடு குடும்பக் கூட்டினிலே!
கூட்டு குடும்பமாய் வளரும் பறவைகளுக்கே இந்த கதி என்றால், நமக்கு? என்ற சிந்தனையில் கனவை நினைவாக்க துடிக்கும் மானுட மனம்

No comments:
Post a Comment