இருவரும் இணைந்திருக்க முடியாத சூழ்நிலையில் பிரிய வேண்டிய கட்டாயமேயானாலும் காலம் காட்டுவதில் மட்டும் நாங்கள் பிரிவதில்லை
பிரிவு என்றிருந்தாலும் நாங்கள் சேரும் இடங்களும் உண்டு
சேர்ந்தாலும் எங்களுக்குள் தனித்துவம் என்பது உண்டு
தனித்துவம் கொண்டாலும் கடந்தது கடந்தது தான்
கடந்து போகும் இரவும் பகலும் நாளைய வளர்ச்சிக்காகவே
வளர்ச்சியிருந்தாலும் உள்ளிருக்கும் எங்கள் வடிவத்தில் மாற்றம் இல்லை
மாற்றம் வேண்டுமெனில் நல்லவைக்கு மட்டுமே செவி கொடுத்து, தீயவைகளுக்கு விடை கொடுங்கள் எங்களை போல்
என்ன நடந்தாலும் ஓடும் திடம் கொண்ட எங்களை போல் வாழ்ந்திடுங்கள்

No comments:
Post a Comment