உன் சிறப்பும் என் சிரிப்பும்
உறைவிடம் சிறப்பாய் அமைய
உரையாற்றியே அதை கெடுத்துக் கொள்ள
கறை படிந்த உள்ளம் என்றும்
கரை சேர்வதில்லை வாழ்வில்
வலியுள்ள தருணத்தில் வழியும் இங்கில்லை உனை சரணடையாது
விழியோரம் கசிந்த கண்ணிரை கண்டு விளித்தாய் என்னை ஆட்கொள்ள
இரை தேடி சென்றவனுக்கு இறையின் அருள் கிடைக்க
மணம் வீசிய தென்றலோடு அங்கே மனமும் கலந்தது இனிதாய்
கனத்த இதயத்தோடு உன்னை நினைத்த வேளையில் என் மனக் கணம் குறைய
வலம் வந்தேன் உன்னை வளம் கொண்டேன் எந்நாளும் பரவசமாய்
அறை முழுவதும் சுகந்தம் கமழ
குறையென பாரமால் குவிந்த செல்வத்தில்
அரைகுறை மனத்தோடு கடந்தேன் என் காலத்தை
களம் இறங்க கலம் தேவையில்லை நலம் உள்ள மனம் போதுமே

No comments:
Post a Comment