இரண்டும் யாருக்கும் நிற்காது
வழி தெரியாமல் நின்றாலும் காலம்
ஓடும்
காலம் நம் (கைக்கடிகாரத்தில்)
நின்றாலும் வழி போய் கொண்டே
இருக்கும்
உலகம் முழுவதும் சுற்றியும் ஓய்ந்த
பாடில்லை இந்த சாலைக்கும்
கடிகாரத்தி்ற்கும்
காலம் கடந்து போட்ட சாலையா?
காலத்தை கடந்து விட்டதால்
இறுதியாக செல்ல வேண்டியதற்கான
சாலையா?
சாலையை கடக்க காட்டும் காலமா?
புதிதாய் போட்ட சாலையின் உறுதி
தன்மையை காணும் காலமா?

No comments:
Post a Comment