Saturday, November 11, 2023

இந்த வார படமும் கருத்தும் by Veena Shankar

 


ஓவியனின் காதல் தோல்வியடைய மீதியை வரையாமல் இருந்து விட்டார், மனதை காதலியிடம் கொடுத்ததால் அது மட்டும் ஓவியமாய்


தன்னை அழகாக செதுக்க நினைத்த மனிதனுக்கு கிடைத்தது வெற்றியா? தோல்வியா?


இங்கே நிழல் முன்னே நிஜம் பின்னே


நாம் காணும் பார்வையும் இப்படித்தான். முழுமையை கூட சிறுமையாய் காணும் காலம் இது


பெண்ணின் மனதை படிக்க தெரிந்தவன் முன்னே, அதை தெளிந்து கெட்டவன் பின்னேபாவம் ..


எதையோ தேடுகிறேன்..

என சொல்லி -

தன்னையே..

தொலைத்து விட்டான் இவன் !!!..


ஓடுவதில் தவறு இல்லை..

எதன் பின்னால் என்பது தான் இங்கே கேள்வி!!..


ஓட்டம் எடுக்கும் போது..

கூட நிற்கும் 

அதே கூட்டம் ..

முடிவிலும் இருக்கும்..

வெற்றி எனும் பட்சத்தில் மட்டும் !!!


பணம்..

பொருள்..

மாய புகழ்..

நிரந்தரமில்லை..!!..

பாசம்..

நேசம்..

பந்தம்..

பரஸ்பர மெய்யன்பு ..

தான் கூட நிற்கும் -

நிழலாய்!!!..


சில

உண்மைகள்..

சிலருக்கு..

புரிய வரும்போது..

வேண்டுவோர்..

தொலைவிலோ..

இல்லை 

தொலைந்தோ

கூட போய் இருப்பர்..!!


நேரம் நிற்பதில்லை

எவருக்காகவும்..!!

புரிந்து கொள்..

மனமே ..குணமே..!!!..


ஆக சிறந்த

இவ்வாழ்வு..

மறுபடி

வாய்க்குமோ???

யார் அறிவார்..??

தீரா தேடலோடே

சிறப்பாய் 

வாழ்ந்து விட்டு

தான் விடை பெறலாமே!!!கற்பனையின் எல்லை எது வரை?


அது மனதோடு நின்று விட்ட மாயமென்ன?


கண்ணாடியையும் மாற்றி விட்ட பெருமை எவரைச் சேரும்?


மாய வித்தை தெரிந்தவனும் யாரோ ?


விடையறிய வேண்டுமெனில் சற்றே திரும்பி பார்க்க சொல்லுங்கள்,

மனதில் தைரியம் இருந்தால்

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...