துளையினுள் பிரியும் காற்றுக்குள்
பிறக்கும் இசை
கிடந்தால் வேதம்
ஏந்தினால் இதம்
ஊதினால் நாதம்
தெளிந்தால் ஞானம்
யாரும் யாருக்காகவும் எதற்காகவும்
நிற்பதில்லை
கடந்து போவது தான் வாழ்க்கை
சொந்தமென்றாலும்
பந்தமென்றாலும்
நண்பனென்றாலும்
நட்பு என்றாலும்
எல்லாம் ஓர்
வரையறுக்கப்பட்ட உறவே
காலத்தாலும்
செயலாலும்
அதற்கு இதுவே சாட்சி
நிரந்தரமில்லா வடிவுடைய காற்று
துளை வழியே கடத்திய நாதம்
கடன்பட்டேன் அவன்
நாடகத்திற்கு

No comments:
Post a Comment