Sunday, November 19, 2023

காற்றின் மொழி by Veena Shankar

 


துளையினுள் பிரியும் காற்றுக்குள்

 பிறக்கும் இசை


 கிடந்தால் வேதம்

ஏந்தினால் இதம்

ஊதினால் நாதம்

 தெளிந்தால் ஞானம்


யாரும் யாருக்காகவும் எதற்காகவும்

 நிற்பதில்லை

கடந்து போவது தான் வாழ்க்கை

 சொந்தமென்றாலும்

பந்தமென்றாலும்

நண்பனென்றாலும்

நட்பு என்றாலும்

எல்லாம் ஓர்

வரையறுக்கப்பட்ட உறவே

காலத்தாலும்

செயலாலும்

அதற்கு இதுவே சாட்சி


 நிரந்தரமில்லா வடிவுடைய காற்று

 துளை வழியே கடத்திய நாதம்

கடன்பட்டேன் அவன் 

நாடகத்திற்கு

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...