பாவம் ..
எதையோ தேடுகிறேன்..
என சொல்லி -
தன்னையே..
தொலைத்து விட்டான் இவன் !!!..
ஓடுவதில் தவறு இல்லை..
எதன் பின்னால் என்பது தான் இங்கே
கேள்வி!!..
ஓட்டம் எடுக்கும் போது..
கூட நிற்கும்
அதே கூட்டம் ..
முடிவிலும் இருக்கும்..
வெற்றி எனும் பட்சத்தில் மட்டும் !!!
பணம்..
பொருள்..
மாய புகழ்..
நிரந்தரமில்லை..!!..
பாசம்..
நேசம்..
பந்தம்..
பரஸ்பர மெய்யன்பு ..
தான் கூட நிற்கும் -
நிழலாய்!!!..
சில
உண்மைகள்..
சிலருக்கு..
புரிய வரும்போது..
வேண்டுவோர்..
தொலைவிலோ..
இல்லை
தொலைந்தோ
கூட போய் இருப்பர்..!!
நேரம் நிற்பதில்லை
எவருக்காகவும்..!!
புரிந்து கொள்..
மனமே ..குணமே..!!!..
ஆக சிறந்த
இவ்வாழ்வு..
மறுபடி
வாய்க்குமோ???
யார் அறிவார்..??
தீரா தேடலோடே
சிறப்பாய்
வாழ்ந்து விட்டு
தான் விடை பெறலாமே!!!

No comments:
Post a Comment