இரு கால்களில் நின்றாலும் இரையை
தேடுவதில் கவனமும் பார்வையும்
ஒன்றே
நளின நடையும்
கூரிய கண்களும்
இலகுவான எடையும்
அழகிய அலகும்
வெண்பட்டு உடலும்
செடியில் பற்றுதலும்
வளமை உன் வலிமை
என்னை எதிரே கண்டாலும்
என் மனதை மாற்றியது, உன்னை
வேட்டையாடமல் விட்டு விடுகிறேன்
நீ என் மனம் விட்டு என்றும் நீங்காதே !
பறவையே!
உன்னை வேட்டையாடும் மனம் போய்
ரசிக்க தூண்டுதே!
ஓஹோ! என் அகவையும் கூடுதோ!
மனம் மாற்றம் கண்டதோ?

No comments:
Post a Comment