கண்ணாடி என்று பார்ப்பவருக்கு
தோன்றும். இது கண்ணாடியில்லை
என் நிஜத்தை காட்டும் நிழற்படம்
சுமக்கும் சட்டகம் . எனக்கு பின்னால்
நடப்பதையும் ,கடந்து வந்த
பாதையையும்,முதுகில் பதிந்த
தழும்புகளையும் தினமும் பார்த்து
சரிசெய்து கொள்ள எடுத்த முயற்சி .
ஒரு முறை திரும்பி பார் .இந்த நிறம்
மாறும் உலகில் கருப்பு வெள்ளையே
நிரந்தரமானது .அதுவும் சாயம்
போகுது.

No comments:
Post a Comment