முயற்சியின் தொடர்ச்சியே இவை இரண்டும். கொஞ்சம் தவறினாலும் விட்டத்தை பிடிக்க முடியாது. விடாமுயற்சியால் இவை இரண்டையையும் தொட முடியும். தொட்டதை விடாமல் பயணிக்க, திட்டமிட்ட படி நேரம் கைக்கொடுக்க முயற்சியும்,விடாமுயற்சியும் இருந்தால் மட்டுமே சாத்தியம்.
நேரம் கூடிவந்து வாழ்வென்ற பயணத்தில் ஒவ்வொரு நொடியும் காத்திருக்கு புது அனுபவத்தை தர.எல்லையற்ற பயணமும், நேரமும் கையில் இருக்க வழியில் வந்து போகும் காட்சிகளை ரசிக்க தயக்கமேன்.இந்த காட்சியை பார்க்கும் போதே காற்றில் பறக்கும் எண்ணம்..இவை இரண்டும் காத்திருக்கா! பின் அதற்காக நாம் காத்திருக்க வேண்டும்.

உண்மை வித்யா. அருமை
ReplyDeleteநன்றி வீணா
ReplyDelete