என்றுமே கலங்காதது இயற்கையின்
பசுமை மட்டுமல்ல
கல்லில் செதுக்கிய சிற்பங்களும்
தான்
பசுமை மலர இடம் பொருட்டல்ல
பொறுமை தான் அவசியம்
அரிதாரம் இல்லாத முகத்தில் மலர்ச்சி
அதை வடித்தவன்
உளியில் ஓர் புரட்சி
ரசிக்க தெரிந்ததால் மயங்கினேன்
பூஞ்சோலையில்
மூடிய விழிகள் மலர்ந்தால்
அடைபடுவது சிறைச்சாலையில்
இவளின் கண்ணீர் அறியாது உலகு
பசுமை போர்த்திய இயற்கையின்
கம்பளத்தால்
வடித்தவம் எவனோ அவனே முதல்
ரசிகன்
உளியின் தீர்க்கம்
காணும் நமக்கு சொர்க்கம்
பசுமைக் கம்பளம் காணும் நமக்கு
அழகின் அம்பலம்

Wow உளியின் தீர்க்கம்.. காணும் நமக்கு சொர்க்கம் 👌👌 அருமையான வார்த்தைப் பிரயோகம் 👌👌
ReplyDeleteநன்றி கிருத்திகா
Delete