கோல மாவில் கம்பி இழுத்தால் கூட
ஓன்று போல் வருமா என்பது
சந்தேகமே.கோடு போடாமல் வானில்
ரோடு போடும் வித்தை.விண்ணில்
வானவில் வேடிக்கை காட்டும்
இவர்கள் மனிதர்களா!
சாகச வீரர்களே.
விரலின் ஊடே செல்வது போல்
எதிரெதிர் திசையில் நொடி பொழுதில்
பறந்து செல்லும் பட்டாம்பூச்சியா!
இல்லை போர் விமானங்கள்.
கனபொழுது தவறவிடாமல் பல
உயிரின் பொறுப்பு கையில் என தன்
உயிரை மறந்து விண்ணில் வித்தை
காட்டும் இவர்கள் விந்தை மனிதர்கள்.

மிக மிக அருமை வித்யா
ReplyDeleteநன்றி வீணா
ReplyDelete