இரையே இலக்கு எனக்கு
எட்டிப் பிடிக்கும் இடத்தில்
எட்ட நின்று பார்ப்பது கூடாது என்
அகவைக்கு
அகத்தியும் ருசிப்பேன்
அகண்ட கால் வைத்து கார் ஆனாலும்
சரி
ஏறிடிவேன், பிடித்திடுவேன்,
ஆனந்த நடனம் செய்திடுவேன்
என் இனம் பசியாற உதவிடுவேன்
நீயும் விருப்பம் கொண்டால்
மானிடனே! சொல்லிவிடு என்னிடம்
உன் பசி தீர்க்க நானே பலியாகும்
போது
இந்த தழை மட்டும் எம்மாத்திரம்
எனக்கு

No comments:
Post a Comment