ஒற்றைப்பூ காத்திருப்பது புத்தகத்தை
படிப்பதற்காகவே? தலையில் சூடுவதற்காகவா?
புத்தகத்தின் காகிதமும் காகிதப் பூவும்
கசக்கியது என் நெஞ்சை
என் காதலன் எனக்காக உயிர் விட்டதால்
எழுத நினைக்கையில் புத்தகத்தின் பக்கங்கள்
நிறைந்து விட்டது
தலையில் சூட நினைத்த பூவும் வாடிவிட்டது
இறுதியில் என் கதை காவியமானது எதையும்
எழுதாமலே
என் வாழ்வு குப்பையில் போனது கசங்காமலே
எதையும் அனுபவிக்க முடியாமலே
இப்படிக்கு திருநங்கை
காதல் மடல் வரைய எழுதுகோல்
தேவையில்லை, ஒற்றை பூவும் போதுமே! மனது
பகிர
கொஞ்சம் வித்தியாசமாய்
ஒற்றைப்பூ காத்திருப்பது புத்தகத்தை
படிப்பதற்காகவா? மெத்தையில்
படுப்பதற்காகவா?

No comments:
Post a Comment