கவிதை . நொடிக்கு ஒரு முறை பூக்கும்
பூக்கள். படிக்க படிக்க வளரும் புத்தகம்.
தினமும் புது புது காட்சி தரும் வானம்.
கூட இருந்தால் செல்ல தொல்லை.
இல்லை என்றால் அங்கும் இங்கும்
தேடியே மனம் தரும் தொல்லை.
சின்னஞ்சிறு கால்கள் இன்று
வளர்ந்தாலும் என்றும் எங்கள் கண்
முன் குழந்தையே. கண்ணின்
கருமணி தொலைந்தாலும் மனதின்
கண் தொலையா கண்மணியே. நீ
இல்லா உலகு பழக கடினமே. அன்று
முதல் நான் ஆகிறேன் குழந்தையாக..
இல்லையேல் விளங்காத உலகில்
தேடியே தொலைவேன். அதற்கு பதில்
மீண்டும் பிறந்து குழந்தையாக வளர
தினமும் பழகிக்கொள்கிறேன்.நான்
போய் நீ நானாக கற்பிக்கும் பாடம்
கற்க மீண்டும் குழந்தையாகிறேன்.
அனைத்து வளரும், வளர்ந்த
குழந்தைகளுக்கு குழந்தைகள் தின
வாழ்த்துக்கள்..

சமூக சேவைக்கு உள்ளம் கனிந்த பாராட்டுக்கள்
ReplyDeleteஎங்கள் வாழ்வில் உங்களை சந்தித்ததற்கும்
எங்களுடன் நட்பு பாராட்டுவதற்கும்
மனமார்ந்த நன்றி
வாழ்க வளமுடன்
தாங்களும் தாங்கள் அன்பு குடும்பமும்
வாழ்க வளமுடன்
வாழ்க வையகம்
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்
நன்றி சின்ன. வாழ்க வளமுடன்🙏
Deleteஅருமை வித்யா
ReplyDeleteநன்றி வீணா
Delete