ஓர் உருவமாய்
ஓர் உயிராய்
ஓர் மனதால்
பிறந்த
ஓர் உயிர்
தவிப்பறியா மழலை
தவித்த மனதிற்குள்
தாவி வந்ததும்
தாலி நிலைத்தது
அவளுக்கு
தாலாட்டு பாடாமல் உறங்கினாயோ?
தாயை உறக்கத்தில் கண்டு
கொண்டாயோ?
அவள் சேலையின் மணத்தை அறிந்த
நீயும்
அவள் மூச்சை தேடினாயோ?
பசித்த பொழுதில் மட்டும் அவள் அருமையை
அறிந்தாயோ?
உறக்கத்தில் அழுத நீயும் அவள்
வருகையை எதிர்பார்த்தாயோ?
உறக்கம் மட்டுமே சொந்தமல்ல
உனக்கு
இந்த அகவையில்
உன் சிரிப்பும் அழகே!
அதை ரசிக்க நானும் பொறாமை
கொண்டேன் நானும் உன்னைப்போல்
ஆகிட

Wow fantastic 😊
ReplyDeleteThank you dear
Delete