படிகள் பல தாண்டியும்
இடிகள் பல சுமந்தும்
காலடிகள் ஒரு சேர
கொடி நாட்ட புறப்பட்டது
இந்த குடை ஏந்தும் படை ஜோடியாக
யாருக்காகவும்
நிற்காது
அடை மழை வாழ்வில் வந்த பின்
மங்கிய நாட்களும் உண்டு
நான் உன்னிடம்
மயங்கிய நாட்களும் உண்டு
திட்டிய நாட்களும் உண்டு உன்னால்
நான்
தீட்டப்பட்ட நாட்களும் உண்டு
கூரிய வாழ்வும் உண்டு
உன்னிடம்
கோரிய மன்னிப்பும் உண்டு
சபலபட்டதும் உண்டு முன்னாளில்
நான்
என்னை சலனபடுத்தியதும் உண்டு
இந்நாளில்
நீ !
கோடையில் குடையானாலும்
குடைக்குள் மழையாவோம்
அடுத்தவர் நம்மை
கண்டு பிரம்மிக்க,
அவர்தம் வாழ்வை பிரம்மாண்டமாக்க!

Wow Wow .. நரையிலும் தொடரும் தீராக் காதல் இது 👌👌👌
ReplyDeleteநன்றி கிருத்திகா
Delete