மெல்லிய காற்று வீச
கால்கள் தன்னை மறந்து
தன்னிச்சையாய் பூட்டிக் கொள்ள
கணுக்காலில் தாங்கிய கொலுசுகள்
நழுவ
கெண்டை கால்கள் தெரிய
கெண்டை விழியால் அமர்ந்திருந்த
மதிலும் தாங்கியதே
தான் செய்த புண்ணியத்தை எண்ணி
பூட்டிய கால்களுக்கு பூட்டிய கொலுசு
எது விடியல்?
எது வசந்தம்?
எது அழகு?
எது காட்சி?
என்பதை மறந்தேன்
உன் கால்களின் அழகில்
பூட்டி தான் உள்ளது கால்கள் என்று நீ
நினைக்க,
பூட்டி வைத்த கால்களின் அழகை
நான் வர்ணிக்க,
அது தெரியாத நீயும்
அமைதியாய் இருக்க,
கள்வனானேன் நானும் இன்றல்ல
எப்போதும் அதன் நினைவில்

No comments:
Post a Comment