Tuesday, October 3, 2023

கண்ணம்மா by Chinna



காலையில் உன் சிந்தை

கண்ணம்மா

என் மண்டையில்

ஓடுதடி கண்ணம்மா


பார்க்கும் பகல் எல்லம்

கண்ணம்மா

உன் போல் காட்சி தெரியுதடி

கண்ணம்மா


வாங்கும் மூச்சினிலே

கண்ணம்மா

உன் வாசம் தோன்றுதடி

கண்ணம்மா


சோற்று பருக்கை எல்லாம்

கண்ணம்மா

உன் முகம் தோன்றி மறையுதடி

கண்ணம்மா


ஆற்றில் குளிக்கையிலே

கண்ணம்மா

உன் தேகம் தெரியுதாடி

கண்ணம்மா


தூங்கும் வேலையெல்லாம்

கண்ணம்மா

கண்கள் ஏக்கம் கொள்ளுதடி

கண்ணம்மா


(கண்ணம்மாவை பாரதியிடம்

கடன் வாங்கி எழுதியது நானும் கவியாக)


----சின்னா



4 comments:

படமும் கருத்தும் by winmeengal

 'துன்பத்திற்கு துன்பம் கொடுங்கள் ' என்ற கலாம் ஐயா மொழிதலை என்றுமே முன்னெடுங்கள்! கஷ்டம் தானே வருகிறது; கழுத்துக்கு என்ன கத்தியா வரு...