Wednesday, October 25, 2023

இதயமே இதய தீபம் by Veena Shankar

 


 வெளிச்சம் தெரிவது எதனூடே என்பதல்ல கேள்வி, யாருக்காக? எதற்காக? என்பதும் அறிதல் வேண்டும்

காதல் பேசும் இடத்தில் வெளிச்சமும் தேவையோ?

தியாகச் சுடரும் அடக்கமானது பெட்டகத்திலே, காதலர்களின் வெற்றி காணா காதலை போலவே

 மென்மையான காதல் இங்கே சுடரானது, தியாகத்தினாலா?

காதலை போலவே ஒளியும் பரவியது இதயத்தில், முதலில் பாந்தமாக , நடுவில் ஆழமாக, இறுதியில் பாரமாக.

காதல் ஜோதியும் இதுவோ? அணைத்தவர் யாரென்று தெரியாமலே ஒளிர்கின்றது

 இன்றைய காதல் மஞ்சள் வண்ணத்தில்

அன்றைய காதல் அடர் வண்ணத்தில்

இதயத்தின் ஒவ்வொரு துளைகளும் சுவடாய் மாறியது உண்மை காதலின் அழிவால்

 இதயத் துளைகளும் வடிவமாய் ஒளிர்கின்றன அடுத்தவருக்கு, காதலின் சான்றாக

இதயத்தில் துளை விழுந்தாலும் நீ அடைப்பானாக இரு என்றது காதலினால் தோல்வியுற்ற மனம்

எங்கோ எவரோ ஏற்றி வைத்த தீபம் அணையாமல் இருக்கிறது காதல் கொண்ட இரு மனங்களின் காதல் சின்னத்தால்

தவிர்ப்பு இல்லை காதலில் தவிப்பு மட்டுமே என்பர் காதல் ஜோதி ஏற்றி தவிக்கும் காதல் சின்னத்தில்

2 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...