Thursday, October 5, 2023

படமும் கருத்தும் by Veena Shankar



 நீ! கவர்ந்து செல்ல அது உன் காதலியல்ல பறவையே! பகலில் சுட்டெரிக்கும் , மாலையில் தணியும் சூரியன்.


 மலர்மொட்டும் பூதக் கண்ணாடியில் சூரியன் தேடுவது அதிசயமே!


இருக்கும் மன வேதனையில் பற்றிக்கொள்ள மனம் ஏங்கியது.


மன உஷ்ணத்தை விட இது பெரிதல்ல, செவ்வானின் ஓர் நட்சத்திரம் என் வேதனையை தீர்க்கும் என்ற நம்பிக்கையில்


 நீ சிறகை விரித்த போதே உன் கால்கள் பற்ற நினைத்தன அண்டத்தையும் அதிலுள்ள அனைத்தையும்


நானும் அவளும் காதலித்தோம்


காத்திருந்தோம் திருமணம் முடிக்க


அவளை மணக்கும் வேளையில் தான் உணர்ந்தேன் அவள் மாலை கதிரவன் என்று


உடல் முழுவதும் சிவப்பென்பதால் அவள் முகம் சிவந்ததை கவனிக்க மறந்தேன்


எட்டாகனியானது வாழ்வு அவளோடு

2 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...