Thursday, November 23, 2023

படமும் கருத்தும் by Veena Shankar

 


படிகள் பல தாண்டியும் 

இடிகள் பல சுமந்தும்

காலடிகள் ஒரு சேர

கொடி நாட்ட புறப்பட்டது 

இந்த குடை ஏந்தும் படை ஜோடியாக

யாருக்காகவும் 

நிற்காது 

அடை மழை வாழ்வில் வந்த பின்


 மங்கிய நாட்களும் உண்டு 

நான் உன்னிடம் 

மயங்கிய நாட்களும் உண்டு


திட்டிய நாட்களும் உண்டு உன்னால்

 நான்

தீட்டப்பட்ட நாட்களும் உண்டு


கூரிய வாழ்வும் உண்டு 

உன்னிடம்

கோரிய மன்னிப்பும் உண்டு


சபலபட்டதும் உண்டு முன்னாளில் 

நான்


என்னை சலனபடுத்தியதும் உண்டு

 இந்நாளில் 

நீ !


கோடையில் குடையானாலும்

குடைக்குள் மழையாவோம்


அடுத்தவர் நம்மை 

கண்டு பிரம்மிக்க,


அவர்தம் வாழ்வை பிரம்மாண்டமாக்க!

2 comments:

  1. Wow Wow .. நரையிலும் தொடரும் தீராக் காதல் இது 👌👌👌

    ReplyDelete
    Replies
    1. நன்றி கிருத்திகா

      Delete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...