Thursday, August 31, 2023

பூவார் தீவு by Vidhya Nivash


ஒருபுறம் அமைதியாக ஓடும் ஆறு

 மறுபுறம் கொந்தளிக்கும்

 கடல்.இரண்டும் ஒன்று சேரும்

 அழகு.அமைதியான நதியில் செல்லும்

 படகில் நாமும் கரைந்து செல்ல வழி

 எங்கும் இதுவரை கண்ணில் படாத

 பறவைகள் வரவேற்க பேரலைகளின்

 சத்தம் நம்மை எழுப்ப அந்த

 அலைகளின் சாரல் காற்றில் படலமாக

 எங்கும் வெண்புகை

 மூட்டம்.கேரளாவில் நெய்யாறு

 அரபிக்கடலில் கலக்கும் இடம்

 பூவார்.மனதை கொள்ளை

 கொள்ளும் அழகும், பசுமையும்

பூவார் தீவு. 



படமும் கருத்தும் by Veena Shankar

 


உள்ளிருப்பு போராட்டம் எதற்கு?


வாழ்க்கையில் கைதியானதாலா?


அல்லது  


வசதியை தேடி அலைந்ததாலா?


அல்லது


துரத்திய சூழ்நிலையாலா?


அல்லது


கொண்ட வினையாலா?


அல்லது


அடைந்த பிறப்பாலா?


அல்லது


தவறை திருத்திக் கொள்ளாததாலா?


அல்லது


கொள்கையை மறுத்ததாலா?


அல்லது


கொஞ்ச தெரியாததாலா?


அல்லது 


கெஞ்ச விருப்பமில்லாததாலா?


அல்லது


பரிவு கொண்டதாலா?


அல்லது 


பிரிவு கண்டதாலா?

குளுமை by Vidhya Nivash

 


தனிமையில் வெறுமை இல்லை இந்த

 சலசலவென ஓடும் நீரில் யாரும்

 தேவையில்லை .ஒற்றை கல்லில்

 அமர்ந்து மீனுக்கான வெகு நேர

 தேடலின் நடுவே தன் இரு சிறகை

 விரித்து பார்ப்போரை தன் வசம்

 இழுக்க கருமையும் இந்த வெயிலில்

 ஜோலிக்க சுற்றியுள்ள பசுமையை

 தாண்டி இது என்ன அழகு என

 வியக்கச் செய்கிறது.

Wednesday, August 30, 2023

படமும் சிந்தனையும் by Veena Shankar



 நாள் முழுவதும் உன்னை

 வார்த்தைகளால் நான் வஞ்சித்தாலும்

 இரவை ரசிக்க நீ வேண்டும் அது

 ருசிக்க நானும் வேண்டும். 


வா! வா! இன்றே வா! விடிந்து விடப்

 போகிறது, நாளை நம் மகனுக்கு

 அவ்வறை வேண்டுமல்லவா?


 பலராலும் சிலாகித்து பேசப்பட்ட

 விசயமானாலும் எவராலும்

 வெளிப்படையாக பகிர முடியாத

 ஆனந்தம் இந்த பந்தம். 


கலவியை பாடியோர் பலர்


அனுபவத்தை பகிர்ந்தோர் சிலர்


உணர்வுக்கு வெற்றி கொடுப்பவர் பலர்


உணர்ச்சிக்கு தோல்வி கொடுக்கும்

 சிலர்


தனித்து விடப்பட்ட வேளையில் பலர்


தவிர்த்து வாழ்பவர் சிலர்


இரவின் மடியில் நிம்மதியாய் பலர்


இரவே சூனியமாய் சிலர்


அருகில் ரசிப்பவர் பலர்


அகதளம் செய்வார் சிலர்


இம்மையில் மறுமை வேண்டுவோர்

 பலர்


இம்சையில் பொறுமை கொள்பவர்

 சிலர்


காற்றே நில் by Vidhya Nivash


  எங்கும் நீல வான் சூழ வெண்

 மேகங்கள் மலைக்கு குடைப்பிடிக்க

 மரங்கள் ஆட காற்றாலை வந்து சுற்ற

 மேகங்கள் மெல்ல அசைய விழித்த

 மலை யார் அங்கே அந்த மரங்களை

 மெல்ல ஆட சொல்லு ரொம்ப குளிருது

 என்று மேகத்தை இழுத்து மூடி தூங்க

 மீண்டும் மேகம் அசைய எட்டிப்பார்க்க

 வந்தது சூரியன் வேறென்ன செய்ய

 என வணங்கிய மலையை பார்த்து

 சிரித்த  காற்றாலை மீண்டும்

 வேகமாக சுற்றியது.அங்கு சென்ற

 ரயில்ப்பெட்டிக்கு கையசைத்தவாறு. 


படமும் கருத்தும் by Veena Shankar

 


பெண்களின் கூட்டணியின் பொருள் என்ன?


அடுத்த வேளை என்ன சமைக்கலாம்?


எந்தெந்த காய்கறிகள் அழுகி போகும் நிலையில் உள்ளது?


வருகிற திருமணத்திற்கு என்ன புடவை அணியலாம்?


அதற்கு இணையான நகை எது?


யார் யார் போகலாம்?


அலுவலகத்தில் விடுப்புக்கான காரணம் என்ன சொல்லலாம்? 


இந்த மாத செலவு அதிகமாகி விட்டது. அதற்கு என்ன மாற்று வழி செய்யலாம்?


பிள்ளைகளின் எதிர்காலம் என்ன?


ஆடி மாதத்தில் வாங்கிய புடவையை கணவரிடம் சொல்லாமல் மறைக்களாமா?


தேவைப் படாத நேரத்தில் அறிவுரையும் தேவையுள்ள நிலையில் சமாதான பேச்சும்


எல்லாம் சிலாகித்து பிறகு யாரை பற்றி புறணி பேசலாம்?


அந்த பேச்சு நெடுநேரம் சென்ற பிறகு நமக்கென்ன என்று உரையாடலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதும் உண்டு


 நம் அழகான அறிவான கூட்டணியில்

Tuesday, August 29, 2023

மீண்டும் சந்தித்தல் by Vidhya Nivash

 


நகர்ப்புறத்திலிருந்து கொஞ்சம் தள்ளி

 வண்டி ஓட்டுநருக்கே தெரியாத ஒரு

 இடம்.எந்த எதிர்பார்ப்பும் இல்லை

 ஓய்வுக்காக கூடே சென்றோம்.அங்கு

 தான் ஒரு அற்புதமான புல்லரித்த

 அனுபவம் கிடைத்து.

திருமணத்திற்கு வரும் சொந்தம்

 போல் ஒருவரை ஒருவர் வரவேற்க

 பலர் வழியில் சேர்ந்து ஒன்றாக வர

 வாசலில் பதாகையுடன் ஆரம்பமே

 அசத்தல்.

 மீண்டும் சந்தித்தல் ஆம் இருபத்தி

 இரண்டு ஆண்டுகள் கழித்து.இது

 கணவருடைய நண்பர்கள் சந்திப்பு

 என்றாலும் குடும்பத்துடன் பலரும் ,

 தனியாக பெண்கள் பலரும்

 விமானத்திலும், தொலை

தூரத்திலிருந்து ரயிலிலும்

 வந்து இருந்தது ஆச்சரியமாக,

 சந்தோஷமாகவும் இருந்தது.அதிலும்

 ஒரு சிலரே தொடர்பில் இருந்தாலும்

 ஐந்து பேரை தவிர அனைவரும் வந்து

 இருந்தனர்.அப்பா அசந்து போனோம்

 ஒவ்வொருவரும் எங்கு விட்டு

 சென்றார்களோ அதே இளமை

 துடிப்பு,பாசம் இன்னும் அதிகமான

 நட்பு ....கொஞ்சம் பொறாமையாக

 இருந்தது.செல்ல பெயரை அழைத்து

 நீ அப்படியே தான் இருக்க என்று மாறி

 மாறி சொல்லி துணையாக போன

 எங்களுக்கும் நல்ல வரவேற்பு அதில்

 ஐக்கியம்.


குழந்தைகளுக்கும் ஒரு

 புதுவித நட்பை உருவாக்கி

 தந்தது.ஒவ்வொருவரும் தங்களுடைய

 அனுபவங்களை சொல்லும் போது

 கற்ற வாழ்க்கை பாடங்கள் பல.படி

 படியாக ஏறிய முன்னேற்றங்கள்.

வாழ்க்கை வட்டத்தில் மேலும் கீழுமாக

 வந்த சுழற்சி.அமைதியாக இருந்த

 பெண்கள் வாய் திறந்தவுடன் வாய்

 மேல் கைவைக்கும் அளவுக்கு அரசு

 பணியில்,தனியார் பணியில் பல

 வெற்றிகள்.கடைசியாக ஓடி ஓடி

 போதும் இருப்பது போதும் என்ற

 பலரின் மனமும்..அருமை.பலரின்

 கூட்டு முயற்சியால் வந்த பலரும் எந்த

 வித்தியாசமும் இல்லாமல் ஓரே

 கோட்டில்,வெகுநாள் கழித்து

 தோழிகளை கண்டு விடைபிரிய

 முடியாமல் துடிக்க.  குழந்தைகளுடன்

 வந்ததே பிற தோழிகளால் இங்கு

 கூண்டு பறவை சில நேரம் சுதந்திர

 காற்றை சுவாசிக்க என சிலரும். 

பல நாடு,ஊர்களிலிருந்து வந்து

 பரிமாறப்பட்ட,இனிப்புகள் 

தின்பண்டங்கள் ஆஹா.


மறுநாள் அரசு கல்லூரி

 இன்னும் மாறாத அதே வகுப்பறை

 பெஞ்சுகளுடன் வரவேற்க.சின்ன

 குழந்தைகள் போல் அப்பாவும்,

 அம்மாவும் தங்கள் பிள்ளைகளுக்கு

 சுற்றிகாட்ட..அங்கோ மறுபுறம் 80 ல்

 படித்தவர்கள் இளமை திருப்புதே

 என்று சுத்தி வந்தனர்.இதில்

 கல்லூரியில் பல்துறை தோழர்கள்

 வேறு ஒருபக்கம்.கடைசியாக வந்த

 தருணம் ஐந்து வயது பையன் பதின்

 பையனுடன் நானும் போறேன் அம்மா

 என்றும் ,கிளம்பபோறோம் என்றவுடன்

 சுருங்கிய பிஞ்சு முகங்கள் ,சுற்றி

 சுற்றி நான் வரமாட்டேன்

 என்றும்.எப்படி வந்தது இந்த பாசம்

 என்று வண்டியில் பயணிக்கும் போது

 நமக்கும் மனம் வீட்டுக்கா !சொல்ல

 முடியாத ஒரு பிணைப்பு.பலரின்

 முயற்சியால், இரு மாதங்களாக

 தூங்காமல் செய்த முயற்சியில்

 நடந்த அற்புதம்.


 நம்முடையதை திரும்பி பார்த்தால் பல

 பக்கங்களை காணோம் .கடைசியாய்

 உலகில் யார் எந்த மூலையில் எப்படி

 இருந்தாலும் மண்ணின் இயல்பு

 மாறாதது என்பதற்கு நம் குழந்தைகள்

 சாட்சி. 



படமும் கருத்தும் by Veena Shankar

 


கொஞ்சியது அழகு

விஞ்சியது வீரம்

துஞ்சியது உடல்

அஞ்சியது மனம்

கெஞ்சியது காலம்

மிஞ்சியது காதல்

எஞ்சியது நினைவு


எதிர்காலம் பின் நிற்க கடந்த காலமும்

 சொல்வதென்ன?


அவன் மேல் உள்ள காதலையா? 

தன் நிலை அவனுக்கு தெரிந்தால்

 எதிர்நோக்கும் விளைவையா?

அதனால் வரும் மன உளைச்சலையா?

சொல்ல முடியாத உணர்வையா?

தன்னிலை மறப்பதும்

இயலாமையிலா?


ஏன் இந்த குழப்பம்?

முதல் திருமண வாழ்க்கை

 முடங்கியதால்

 தற்போது எழும் முனகல்

Monday, August 28, 2023

சிந்திக்க by Vidhya Nivash

 


 பூத்துக்குலுங்கும் மலரை கேட்டேன்

 அது பேசவில்லை சுற்றியுள்ள

 மலைத்தொடர்களை கேட்டேன்

 அதுவும் பேசவில்லை ஏன் காற்றையும்

 கேட்டேன் அதுவும் பேசவில்லை சுற்றி

 திரிந்த வண்டை கேட்டேன் அதுவும்

 பேசவில்லை கடைசியாக

 குழந்தையை கேட்டேன் காதிலிருக்கும்

 அடைப்பை எடுத்து சொன்னது இதை

 வைத்துக் கொண்டு எதை கேட்டாலும்

 கேட்காது.சுற்றியுள்ள அனைத்தும்

 சிரிப்பது போல் இருந்தது.


படமும் கருத்தும் by Veena Shankar

 


இரையாவது மழலையா? பறவையா?


மண்ணில் புதைந்து முகம் காட்ட இயலா மழலையும்  


இரையோ இது தனக்கு? என்று முகம் நிமிர்த்தி பார்க்கும் கழுகும்


விழித்து நின்றது எதற்கு?


தன்னுடைய பசியை போக்க முடியாவிட்டாலும் மழலையின் அழுகையை நிறுத்தி விட வழி தெரியாமல் 


தன் சுற்றத்தாரை விரட்டி மழலைக்கு ஆயுள் கொடுத்து மனிதன் அறியா மனிதத்துவத்தை காத்து நின்றது


நேயம் கொள்ள அறிவு அவசியம் என்றாலும் இந்த பறவையும் அதை அறிந்து வைத்ததில் ஆச்சரியமே!


எனக்கும் இறக்கை இருந்தால் பறந்திருப்பேன் என்று சொல்லும் சிறுமி தன் இரு கைகளை மண்ணில் புதைத்தவாறு

Sunday, August 27, 2023

ஆனந்ந காட்சி by Vidhya Nivash

 


காலையில் ஆனந்த காட்சி சுற்றியுள்ள

 பச்சை பட்டாளத்தின் நடுவே உன்னை

 வேறுப்படுத்தி பார்க்க

 முடியவில்லை.மழை வரும் போது

 தோகை விரித்து நீ ஆடுவாய் என்று

 பொதுவான எண்ணம்.ஆனால் இந்த

 அதிகாலையில் யாரை வரவேற்க

 ஆடுகிறாயோ! யாரை எண்ணி

 தனிமையில் நடமாடுகிறாயோ!

 மானும் ,காட்டு யானையும்,காட்டு

 மாடும் சுற்றித்திரியும் இடத்தில்

 இன்று வித்தியாசமாக வந்த புது

 சுற்றுலா பயணிகள்

 நாங்கள்.பார்ப்பதெல்லாம் அதிசயம்

 எங்களுக்கு...

புகைப்பட தினம் by Veena Shankar

 



 புகைப்பட தினமே! 


எண்ணத்தின் வழியே பிறக்கும் வண்ணப் படம் அதுவே புகைப்படம்.


எடுப்பவர் யாரோ அவரின் திறமை வெளிப்படும் நேரம் நிகழ்ச்சியின் நன்னேரம் 


பிடித்த காட்சியும்

பிடிக்காத சம்பவங்களும்


தெரிந்த கலையும் பிறருக்கு தெரியாத வகையும் 


சிறந்த தருணங்களும் பின்னாளில் சிந்திக்க வைக்கும் நினைவுகளும்


தற்காலிக மகிழ்ச்சியும் தன்னிகரில்லா ஆனந்தமும் தன்னகத்தே கொண்டாலும் 


எடுத்து கொள்பவர் வாழ்வில் ஓர் வசந்தமாய் 

அதுவும் புது வசந்தமாய் மாறும் வேளையும் 


மீட்டு கொடுக்கும் நினைவலைகளும் மீளா துயரிலும் 


மீண்டு வந்து எடுக்கும் மனமும் அதை பிறர் ரசிக்க அதை உருமாற்றி கொடுக்கும் ஆற்றலும் 


உன்னில் எத்தனை மாற்றங்களை கொண்டாய் 

காலமும் பிரித்து பார்க்கவில்லை உன் வளர்ச்சியை


அதனூடே வளர்ந்தாலும் உன் அசுர வளர்ச்சியில் வான் போல் நிற்கிறாய் 


விளம்பரமில்லாமல் உன்னை ரசிக்க வைக்கும் தன்மையும் உண்டே!


அதுவும் நீயே! 


நீயல்லாது மாற்று வழி அறிந்திலேன்,


இந்நாளில் இந்த புகைப்பட தினத்திற்கான நன்னாளில் 


மெய் சிலிர்க்க வைத்து என்னை எழுத தூண்டிய உன் அருமையை என்றும் மறவாத 


உன்னை எந்நாளும் விரும்பும் நான் என்பவள் உன்னை ரசித்து போற்றும் மக்கள் கூட்டத்தில் ஒருத்தி


புகைப்பட தினமே! வா ! வா ! வசந்தத்தை காட்ட


 (அகில புகைப்பட தினத்திற்காக எழுதியது 17 th August)




Saturday, August 26, 2023

கள்ளிப்பூ by Vidhya Nivash

 


கள்ளிச்செடி பார்த்திருக்கிறேன்

 முதன்முறையாக கள்ளிப்பூ கண்ணில்

 பட்டது.

யாருமில்லா கரடு மேட்டில்

 பூத்து நின்ற கள்ளியே

 பார்ப்போர் மனதை கொள்ளை

 கொள்ளும் கள்ளியே

 கள்ளங்கபடமில்லா வெள்ளை நிறம்

 கொண்ட கள்ளியே

 வருடத்திற்கு ஒரு முறை இரவில்

 மட்டுமே மலர்ந்து மாலையில்

 மயங்கும் கள்ளியே 

உன் தரிசனம் கிடைத்ததால் அகமுகம்

 புறமுகம் மலர்ந்தது கள்ளியே




களைப்பும் களிப்பும் by Veena Shankar

 


பின் வைக்கும் காலை முன் வைக்கும் போது முன்னேற்றமே அன்றி வேறில்லை


இரண்டு பக்கங்களிலும் பயணித்தாலும் காட்சி ஒன்று தான். பார்வை மட்டுமே வேறு


முயற்சியின் வெற்றியால் முன்னேறும் பாதை சமதளம்


கடந்து பாதையை பின்னே பார்த்தால் அது வெறும் கல்லும் மண்ணும் தான்


ஊராரின் பார்வையோடு ஒத்து போக நம் பார்வையும் சுழல வேண்டும் எல்லா பக்கமும்


தன் சக்தியை காலால் மிதித்து வாழ்க்கையை முன்னேற்ற செய்யும் தந்தையின் தியாகத்தால் களிப்புடன் வானத்தை ரசிக்கும் சிறுவன்


களைப்பும் களிப்பும் ஒரு சேர்ந்த இடம், இந்த படம்.


எல்லையை தொட்ட மகிழ்ச்சியில் ஒருவர் முகம் மறைத்து 

எல்லையை தொட நினைக்கும் மற்றொருவர் உலகிற்கு தன் முகம் காட்ட

செல்லும் பாதையும் பயணமும் ஒன்றானாலும் இலக்கு வெவ்வேறு தான்

Thursday, August 24, 2023

வான் கொள்ளா அழகு by Vidhya Nivash

 


கண்ணை பறிக்கும் சூரிய ஒளியில்

 தகதகவென மின்னிய மலைத்தொடர்.

 தீடீரென வான் தூவிய பொன்

 முத்துகள் ஒன்றொக கூடி வானில்

 தோன்றிய அதிசயம் இரட்டை

 வானவில். சிறிது நேரத்தில் காட்சி

 தந்த முழு வானவில் வானம் கொள்ளா

 அழகு.நீரும் ஒளியும் சேர்ந்து

 வண்ணமாக மிளிற ,யார் வந்து

 கவராயம் கொண்டு பிசிறு தட்டாமல்

 வரைந்தனரோ அரைவட்டமாக

 அற்புதம்.

பச்சை விளக்கின் மாற்றம் by Veena Shankar

 


பச்சை விளக்கில் வளர்ந்த பச்சை

 கொடிகள்


சிறு ஒளி கூட போதும் இருளை போக்க

பசுமை வளர்க்க


சந்திரன் இல்லா இடத்தில் இரவு

 விளக்கும் ஒளி கொடுக்க, 

அந்நேரம் பக்கம் இருந்த கொடியும் படர

 இடம் தேட ,

அந்த விளக்கு ஒளியே கொடியின்

 பேச்சுக்கு செவி கொடுக்க 

கொடியும் விளக்கில் ஒய்யாரமாய்

 நிதமும் படர, அந்த விளக்கு ஒளியும்

 மங்கியது

தன் நிலை மறந்து. இருட்டை நீக்கிய

 விளக்கு இன்று காணாமற் போனது

 கொடியின் ஆழ்ந்த பிரவேசத்தால்

Wednesday, August 23, 2023

வரலாற்று சாதனை by Vidhya Nivash

 


நிலவொளியில் மின்னும் மண்ணும்

 அதற்கு இணையாக கம்பீரமாக

 நிற்கும் ராஜராஜ சோழர் இல்லை

 இல்லை ஒவ்வொரு கல்லாக, உடலே

 உளியாக செதுக்கி அடுக்கிய பலரின்

 வியர்வை துளிகள் சேர்ந்து

 மிளிர்கிறதோ. உடையாரை படித்த

 பிறகு பெரிய கோயிலின்

 நுழைவாயிலை மிதிக்கும் போதே

 மேலிருந்து ராஜராஜ சோழரும்,

 துணைவியாரும் வரவேற்ப்பது போல்

 உணர்வு.



பல வருடங்கள் கழித்தும் இன்றும்

 பேசப்படும் வரலாறு போல் நேற்றைய

 ISRO வின் சாதனையான சந்திரயான்

 மூன்றின் வெற்றி பொன்

 எழுத்துக்களால் பொறிக்கப்பட

 வேண்டிய ஒன்று.இதன் வெற்றிக்கு

 காரணமான ஒவ்வொருவருக்கும்

 வாழ்த்துக்கள் பல அவர்களுடைய

 வியர்வையே இன்று நிலவில்

 கம்பீரமாக மிளிர்கிறது.



படமும் கருத்தும் by Veena Shankar

 


நட்சத்திரம் ஒன்று நிலவை எட்டி நின்று ரசிக்கிறது


நிலவில் குடி புக பாதை போட்டாச்சு. உங்கள் சுமையாய் மனித நேயத்தை மட்டும் எடுத்து செல்லுங்கள்.


ஆஹா! என்ன அழகு! இப்படியொரு பாதை பூமியில் இருந்து நிலவுக்கு இருந்து இருந்தால் வஞ்சகர்கள் கூட்டம் முன்னேறி அங்கே குடி புகுந்திருக்கும், பூமியில் இருப்பவர் அமைதியாய் வாழ வழி கோலியிருக்கும்


நிலவிடம் செல்ல ஏணி எதற்கு? அன்றே சோறு ஊட்டும் போது என் தாய் நிலவினை என்னருகே கொண்டு வந்திருக்கிறாளே !

Tuesday, August 22, 2023

அதிசயம் by Vidhya Nivash


 வித்தியாசமான மலர் ஏற்கெனவே

 பார்த்து இருந்தாலும் முதல் முறையாக

 கண்டேன் அதிசயத்தை மரத்தின்

 வேரும் மலரும் கிளைக்களுக்கு

 அடியில் எத்தகைய இயற்கையின்

 படைப்பு.நுனியில் மலரும் மலர்

 இங்கே வேரின் நுனியில் அழகு.கீழே

 கொட்டிக்கிடைக்கும் மலர்களை

 பார்க்கும் போது அங்கு தடமாக மாறி

 தினமும் சுமக்க ஆசை.இன்னொரு

 வித்தியாசமான காட்சி.மரத்தடியில்

 குப்பைத்தொட்டி அங்கு மரத்தை தவிர

 யாரும் கீழே எதையும் போட

 அனுமதில்லை. அற்புதமான

 அதிசயமான இயற்கையின் அழகை

 ரசிப்பதுடன் காப்பதும் நமது கடன்

 என்று சொல்லாமல் சொன்ன காட்சி.

இந்த அழகியின் பெயர் நாகலிங்க பூ.

படமும் கருத்தும் by Veena Shankar

 


பொன் விளையும் பூமியில் நிலம்

 பணமாகிறது


ரூபாய் நோட்டுக்கள் பறந்து வந்தாலும்

 என் வயலின் விளைச்சலுக்கு

 ஈடில்லை, நான் விவசாயி மகன்


விவசாயியின் கண்களுக்கு காட்சிக்கு

 வைக்கப்பட்ட ரூபாய் நோட்டு


ஐநூறு ரூபாய்க்கு மூன்று

 சோளத்தட்டு, அதிரடி விலை குறைப்பு.

Monday, August 21, 2023

பித்து by Vidhya Nivash

 


கங்கை கொண்ட சோழபுரம்


இந்த காட்சிக்கு அறிமுகம்

 தேவையில்லை என்று

 நினைக்கிறேன். பொன்னியின்

 செல்வன் படம் வந்த பிறகு பலரும்

 சோழர் சாம்ராஜ்யத்தை பற்றி அலசி

 ஆராய்ந்து இருப்பர்.பல காலமாக

 சொல்லப்படும் வரலாறு நம் முன்

 சோழர் ஆண்ட விதத்தை காட்டிச்

 செல்லும்.ஆனால் அவர்கள் சாட்சியாக

 விட்டு சென்ற கட்டட கலையை

 என்னவென்று சொல்வது.ஒரே

 வார்த்தை பிரம்மாண்டம். அதன்

 அருகில் இருக்கும் போது வரும்

 கர்வமா இல்லை மெய்சிலிர்ப்பா

 தெரியவில்லை.இத்தகைய மன்னன்

 நடந்த தடத்தில் நடக்கிறோம் என்ற

 பித்தா தெரியவில்லை.உலகெங்கும்

 தேடினாலும் கிடைக்காத

 பொக்கிஷமா? தெரியவில்லை !





படமும் கருத்தும் by Veena Shankar

 


மெழுகு பொம்மை என்றாலும் 

கனிவு உண்டு கண்களில்

துணிவு உண்டு துடிப்பில்

அழகு உண்டு அகத்தில்

இளமை உண்டு முகத்தில்

எளிமை உண்டு உடுப்பில்

வளம் உண்டு கழுத்தில்

பாசம் உண்டு கரங்களில்

தோழமை உண்டு பார்வையில்

Sunday, August 20, 2023

எதை ரசிக்க by Vidhya Nivash



கொள்ளையழகு இயற்கையின்

 அழகை ரசிப்பதா! மனிதனின் கட்டட

 அழகை ரசிப்பதா! விண்ணை முட்டும்

 கோபுரத்தில் குடும்பத்தோடு கொஞ்சி

 குலாவும் புறவை ரசிப்பதா!

 பிரம்மாண்டத்தில் பிரமித்து அங்கே

 சிலையாக ஆசை.யாரின் அனுமதியும்

 இல்லாமல் கோபுரத்தில்

 குடிக்கொண்ட பறவைகளும்,பலரின்

 கனவில்,கையில் வடித்த,இரு கண்கள்

 காண உருவான, இங்கு கண்மூடி

 ஆயிரம் வருடத்திற்கு மேல் பல

 கோடிகள் கண்கள் கண்ட இந்த

 சிலைகளும் அனுமதிக்க அவர்களின்

 மத்தில் சிலையாக அமர்வேன்..

படமும் கருத்தும் by Veena Shankar

 



மரத்தாலான உடம்பும் மறுத்து போன காளையும் 


அதிக உழைப்பால்

வலுவிழந்தது சூறாவளி கடலிலும், காளையும்


ஓடும் போது தெரியாத அலுப்பு, நிற்கும் போது தெரியும் நிழலாய்


மரம் விற்ற காசில் மாடு வாங்கினேன். மாடு சுமந்து தந்த காசில் வாழ்வை வளமாக்கினேன். இப்போது நிழலுக்கு மரமும் இல்லை, சுமக்க மாடும் இல்லை.  


பிராணி வதை சட்டத்தில் கம்பியும் எண்ணினேன்.  


நான் கொண்டிருந்த மாட்டு வண்டியை

பொருட்காட்சியில் வைத்தேன், அது உழைக்கவில்லை என்பதால்


உழைப்பிற்கான ஊதியம் எதுவோ?


அச்சம் கொள்கிறேன் இப்போது நானும் என் சந்ததியரால் பொருட்காட்சியில் வைக்கப்படுவேனோ என்று? என் உழைப்பை கொடுக்க முடியாததால். 


காலம் பதில் சொல்லும் வேளையில் நான் காலனின் பிடியில்

சதியும் பதியும் by Veena Shankar

 


சதியும் பதியும்


ஒய்யார நடை நடந்து ஓரிடத்தில் சதி அமர, ஊர் சுற்றி வந்த களைப்பில் சதியின் மடியில் பதி, சாய்ந்து நித்திரையில் விழ, தன் அரிதாரைத்தை கலைக்க எண்ணிய வேளையில் பதியின் குறட்டை சத்தம் சதியின் செவியை அடைக்க, என் செய்வது என்று தெரியாமல் சதி முழிக்க, தான் முழிப்புடன் இருந்தால் சதி தன்னை விட்டு செல்வாளோ என்று நினைத்தே காதல் பேச காத்திருந்த பதி, தான் துயில் கொண்டது போல் நடிக்க, பதியின் குறட்டை சத்தம் வெறும் நடிப்பு , காதல் செய்யும் லீலை என சதி பின் உணர, பதியை எழுப்ப ஆலோசனை செய்ய, யோசனை உதித்ததும் தன் பதிக்கு அலைபேசி அழைப்பு வருவதாக சொல்லி துயிலெழுப்ப முயல, அது பதியின் செவியில் விழாமல் போக, நித்திரையில் இருப்பவரை எழுப்பலாம், நித்திரை கொண்டவர் போல் நடிப்பவரை எழுப்பவது கடினமே என்று அறிந்து தெளிந்து கொண்ட சதி, இது தான் தருணம் தன் நகையை கைப்பற்ற என்றெண்ணி ஆடித்திருவிழாவில் தொலைந்து போன தன் நகை கிடைத்து விட்டதாக பதியிடம் சொல்ல, தன்னையறியாமல் சட்டென்று எழுந்த பதி , சதியை கேள்விக்குறியாய் பார்க்க, சதிக்கு தெரியாமல் தான் தன் காதலிக்கு கொடுத்த நகை இவள் கையில் எப்படி வந்தது என்று பதி யோசிக்க, சதியின் நகையை பதி தான் ஒளித்து வைத்திருக்கிறார் என்று நினைத்த சதிக்கு, விடையாவது யாது? 


இங்கே வெல்வது சதியின் சதியா? பதியின் பதிலா?

Saturday, August 19, 2023

சிந்தனை துளிகள் by Veena Shankar

 


நீயும் யாரோ?


சங்கோஜப்படாமல் அமர்ந்து

 கொள்ளேன் என் பக்கத்தில்


என்னுள்ளும் இருப்பதால் எளிதில்

 நீங்கிட மாட்டாயே?


நீ அழிந்து விடுவாய் என்ற மிரட்சியும்

 கொள்வாயோ?


என் பக்கம் நீ இருக்கும் வரை என்

 நிழலும் என்னோடுதானோ? 


இடம் காணவில்லையா? சொல், நான்

 சிறுத்துக் கொண்டு உனக்கு

 இடமளிக்கிறேன் 


என்னை விட்டு நீங்காதே! காதலனுக்கு

 வாக்கு கொடுத்துள்ளேன் நீயே

 அவனென்று 


நீயும் யாரோ?


கடவுளும், மனிதனும்


விதையை விருட்சமாக்குவதும் நீயே!


அதை அழிக்க நினைப்பதும்

 மனிதனே!


பேசாமல் காப்பது நீயே !


பேசியே கொல்வதும் மனிதனே!


முடியாததை நிகழ்த்துபவனும் நீயே!


முடிவதை செய்யாமல் இருப்பதும்

 மனிதனே!


பரவசம் கொள்ள செய்வதும் நீயே!


பாசாங்கு செய்வதும் மனிதனே!


சிலையாய் உறைபவனும் நீயே!


பேச்சால் உறைய வைப்பவனும் மனிதனே!


கற்று கொடுப்பதும் நீயே!


அறிவுரை கேளாமல் விடுவதும்

 மனிதனே!


காதலில் தோல்வி அறியாதவனும் நீயே!


காதல் தோல்வியால் மரமாவதும் மனிதனே!


காக்க துடிப்பவனும் நீயே!


தவறு புரிபவனும் மனிதனே!

Tuesday, August 15, 2023

ஒலியும் பொருளும் by Veena Shankar

 


ஒலியும் பொருளும் 


(நண்பரின் விருப்பத்திற்காக எழுதியது)


குலம் பார்க்க முடியாது கண்கள் குளமாகும் போது


மரம் போல் நிற்க முடியாது மறம் வெற்றி கொள்ளும் போது 


குரல் கொடுக்க தேவையில்லை குறள் வழி நிற்கும் போது 


தாழ்மை தேவையில்லை தாள் பற்றி இருக்கும் போது


ஏறி மிதிப்பது சிறப்பில்லை ஏரி வற்றும் போது 


தளம் வெறுமையில்லை அது கடவுள் தலமாகும் போது


சூல் கொண்ட மலர் வனப்பு இழப்பதில்லை தேனீக்கள் சூழ் கொள்ளும் போது


விழையும் விலையில் வீழ்ச்சியில்லை விளைந்த பயிரின் தன்மை மேன்மை கொள்ளும் போது 


உலவுகின்ற மனம்

உளவு சொல்வதில்லை உழவில் நம்பிக்கை வைக்கும் போது


வாள் என்றுமே வாழ் இழப்பதில்லை தன் வால் அடக்கி வைக்கும் போது 


கிழிவதில்லை வார்த்தைகள் 

கிளிப் பிள்ளை பேச்சில் கிலியடையும் போது 


ஒளி எழுப்பாது வரும் ஒலி நம்மை ஒழித்த போதும்


மறப்போம் மறவன் வழியில்

Monday, August 14, 2023

பழியும் பலியும் by Veena Shankar

 


பழியும் பலியும் 


"ஏங்க! இந்த வீட்டுக்கு நாம குடி வந்து பதினைந்து வருஷம் ஆச்சு. என்ன தான் இந்த மாமியும் மாமாவும் நமக்கு ஒத்தாசையாக இருந்தாலும் இன்னும் இப்படியே இருக்கிறது அவ்வளவு நல்லா இல்லைங்க. அவங்க வாடகையை உசத்தி கேட்டா கூட கொடுத்திடலாம். ஆனா அவங்க இவ்வளவு பெரிய வீட்டுக்கு வெறும் நாலாயிரம் மட்டும் வாங்குறது எனக்கென்னமோ ஒரு மாதிரியாக இருக்குதுங்க" என்று தன் சொந்த வீட்டு கனவிற்கு அடித்தளமிட்டாள் கனகா . " ஏண்டி! உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? இந்த இடத்தில ஸ்கூல், ஆஸ்பத்திரி, ரேஷன் கடை எல்லாம் பக்கத்திலேயே இருக்கு. முக்கியமா இந்த சென்னையில தண்ணி கஷ்டம் இல்லாத ஒரு இடம் ன்னா அது இது தான். இந்த இடத்தை விட்டு வேற எங்க போக முடியும். அதுவும் நம்ம சுமதி திரள்ட்ற வயசுல இருக்கா? ஒரு அம்மாவா இது கூட உனக்கு தெரியமாட் டேங்குறதே!" என்று கனகாவை திட்டி கொண்டே ஷேவிங் செய்ய போனான் விசு. 


இனி பேசினால் வம்பு என்று தன் பேச்சை ஆறப்போட்டாள். தன் சம்பாத்தியத்தில் மூன்று காலி இடத்தை வாங்கி போட்டுள்ளான் விசு. ஒரு இடத்திலாவது வீடு கட்டி குடியேற வேண்டுமென்பது கனகாவின் கனவு.


இவர்களுக்கு சுமதி ஒரே பெண் குழந்தை. எட்டாம் வகுப்பு படிக்கும் அவள் படு சுட்டி, படிப்பில் மட்டுமல்ல எல்லாவற்றிலும். அதனால் வீட்டின் ஓனர் தம்பதியருக்கு ரொம்ப பிடிக்கும். அவர்களுடைய இரு பிள்ளைகளும் வெளிநாட்டில் வேலை செய்வதால் பேரன் பேத்திகள் இருந்தும் காணாமல் தவித்தனர். 


மழை சாரல் போல நாட்கள் நகர, அன்று அடை மழை பெய்ய தொடங்கியது வீட்டினுள், அதுவும் கனகாவால். விசு வீட்டிற்கு வந்ததும் வராததுமாய் ஒரு தம்பளர் காபியை கலந்து கொடுக்க, " இந்த வீடு வேண்டாம்ங்க. வேற வீட்டுக்கு போவோம்" என்று அமைதியாய் கனகா ஆரம்பித்த பேச்சிற்கு, " அதெல்லாம் முடியாது " என்ற பதில் விசுவிடமிருந்து வரவும் , "அதான் இடம் வைத்திருக்கிறோம் இல்ல. அதில் நமக்கான ஒரு இடத்தில் வீடு கட்டி போவோம்ங்க " என்று மீண்டும் சொன்னாள் கனகா. " அதெல்லாம் வேண்டாம்" என்று மறுத்தான் விசு. 


விசுவின் பெற்றோர் சிறுவயதிலேயே இறந்து விட, அவன் தன் தாத்தா பாட்டியின் வீட்டில் வளர்ந்ததால், தன் மகளுக்கும் அந்த பந்தம் விட்டு போய் விடக்கூடாது என்று நினைத்தே மறுத்தான் விசு. கனகாவின் பெற்றோரும் அவள் தம்பியிடம் வெளிநாட்டில் இருக்கிறார்கள் 


"சரிங்க! இனி உங்க இஷ்டம். ஆனால் நான் இப்போ சொல்றேன் பாருங்க. அதையாவது கேளுங்க. வேறு வீட்டுக்கு போவோம் என்று சொல்வதற்கும் ஒரு காரணம் இருக்கு. நம்ம கீழ் வீட்டு தாத்தா நம் சுமதியிடம் என்னன்னவோ அசிங்கமா பேசி கேட்டிருக்கிறார் . வேணும்னா நீங்க சுமதியிடம் கேட்டு பாருங்க. " என்றதும் அவனுக்கு வந்த கோபத்தில் வீடு ரணகளப்பட, கனகா அவரை பற்றி தவறாக பேசுவதாகவும், இதைப்பற்றி அவரிடமும் சுமதியிடமும் தான் கேட்க போவதில்லை என்றும் சொல்லி கத்தினான்.


 "உங்களோடு பேசினால் எனக்கு பைத்தியம் பிடித்துவிடும் " என்று கனகா இடத்தை காலி செய்ய, படுக்கையில் புரண்டு படுத்தவனுக்கு பலதும் தோன்றியது. ஒருவேளை கனகா சொல்வது உண்மையாக இருந்தால் என்றும் தன் அப்பா ஸ்தானத்தில் அவரை வைத்து பார்த்தவனுக்கு ஜீரணிக்க முடியவில்லை என்பதே உண்மை.


ஆடி காற்றுக்கு அம்மியும் நகரும் என்பது போல ஆனது. ஆம் ! விசுவின் மனம் மாறி கனகா விரும்பிய இடத்தில் வீடு கட்டும் பணி விரைவாய் நடந்து முடிந்து குடியேறியும் விட்டது விசுவின் குடும்பம்.


தான் கண்ட கனவு பலித்து விட்டதாக கனகா நினைத்தாலும் , சொந்த வீடு கட்டினால் தான், தனக்கு நல்ல தூக்கம் வரும் என்று நினைத்தது மட்டும் தவிடு பொடியானது. 


ஆம்! குடியேறி பல மாதங்கள் ஆனாலும் ஏதோ ஒன்று அவளை துரத்தியது. வீட்டை அப்படி பராமரிப்பேன் என்று சொன்ன கனகா, அதற்கான எந்த முயற்சியையும் எடுக்காதது கண்டு விசுவும் ஆச்சரியப்பட்டான்.


ஒரு நாள் விசுவும், சுமதியும் இல்லாத சமயம் அந்த பழைய வீட்டு தாத்தாவுடன் போனில் பேசிய கனகா, கண்ணீர் விட்டு அழ, அவளை தேற்றினார் தாத்தா.   


தான் பொய் சொன்னதால் தான் தூக்கம் வரவில்லை என்றும் தான் விசுவிடம் உண்மையை சொன்னால் மட்டுமே நிம்மதியாய் இருக்க முடியும் என்று தாத்தாவிடம் கனகா சொல்ல, தாத்தா அவளை கடிந்து கொண்டார் . "பைத்தியம் மாதிரி பேசாதே. நீ சொந்த வீடு கட்டனும்ன்னு எவ்வளவு ஆசைப்பட்ட,? என் பொண்ணுக்காக நான் இந்த உதவி கூட செய்யமாட்டேனா? " என்று சொல்லி அழைப்பை துண்டித்துவிட்டார் தாத்தா.


இருவருக்குள்ளும் ஏன் இந்த உரையாடல்? கனகாவின் புது வீட்டு கனவுக்காக தாத்தா பழியேற்று இருக்கிறார் என்பதே உண்மை. தாத்தா மீது பழி போட்டு தான் புது வீட்டிற்கு செல்லமாட்டேன் என்று கனகா சொன்னதற்கு அவளை சமாதானப்படுத்தி ஏற்க வைத்துள்ளார் தாத்தா. இதைப்பற்றி விசு தன்னிடம் கேட்க மாட்டான் என்றும் அவர் மனைவியிடம் இதை சொல்லவேண்டாம் என்றும் கனகாவின் கேட்டு கொண்டார்.


இருந்தாலும்

குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும் தானே?

தான் போட்ட பழிக்கு தானே பலியாகி விட்டாள் கனகா மனதால். அடுத்து கனகாவின் முடிவு என்ன? காத்திருந்தது காலம்


நிம்மதி மனதால் அடையக் கூடியது. பிறரின் தியாகத்தால் கிடைத்தாலும் அது நிலைக்காது.

Sunday, August 13, 2023

நலம் அறிய ஆவல் by Veena Shankar

 


நலம் அறிய ஆவல்


"என்னப்பா இப்படி வாடி போய் இருக்கிற? காலையில ஏதும் ஊற்றி கொண்டாயா? நிழல்ல போய் உட்கார்ந்துக்கோன்னு உன்னை சொல்லவும் முடியல. மழையும் பெய்யமாட்டேங்குது. நீயும் எவ்வளவு நாள் இந்த வெயிலை சமாளிப்ப? நான் ஊருக்கு போயிட்டு வரேன்னு உன்கிட்ட முதலிலேயே சொல்லியிருந்தேன். ஆனாலும் நீ என்னை எதிர்பார்த்து காத்து கொண்டே இருந்தா இப்படி தான் சோர்வு தரும். சரி நான் உனக்கு தேவையானபோது தாகத்துக்கு தண்ணி கொடுக்க சொல்லி நம்ம ராமுகிட்டே சொல்லிட்டு போயிருந்தேன். அவன் எப்படி, உன்னை நல்லா பார்த்துகிட்டானா? எனக்கு னனு இருந்த ஒன்று இரண்டு பழத்தையும் கொண்டு போயிட்டான்? நீயும் பார்த்துட்டே சும்மா இருந்திட்டியா? இன்னிக்கி பஸ் விட்டு இறங்கும் போது அவன் பொண்ணு கையில இருந்தது வச்சி கண்டுபிடிச்சேன். வரட்டும் அவனை பார்த்து நாலு வார்த்தை கேட்கணும். உன்னையும் சரியாகவே கவனிக்காம போட்டுருக்கான் " என்று தன் நீண்ட வசனத்தையும் வருத்தத்தையும் தன் தோட்டத்தை பார்த்து கேட்டுக் கொண்டிருந்தான் தோட்டக்காரன் முனியசாமி.

ஆண்டனா by Vidhya Nivash

 


ஒரு வித்தியாசமான செடி . தண்டு

 மட்டுமே உடல். அதன் நுனியில் மட்டும்

 சிண்டுப்போல் சிறு இதழ்கள்.

 ஒன்றுடன் ஒன்றாக பின்னப்பட்ட

 வலைப்பின்னல் போல் உடல்.பூக்காத,

 காய்க்காத செடிப்போல் இங்கு

 இலைகளே இல்லை.பார்ப்பதற்கு

 அன்றைய டிவி ஆண்டனா போல்

 வடிவம்.

டிவி ஆண்டனா என்றவுடன் பழைய

 ஞாபகம் மொட்டை மாடியோ, வீட்டின்

 ஓட்டின் மீதோ ஏறி அதை சுற்றத்தார்

 இல்லை.அதிலும் காக்கா தான் முதல்

 எதிரி.அன்று தெருவுக்கு ஒரு டிவி

 இன்று சிக்கலே இல்லாத சிக்னலில்

 வீட்டின்  அறைக்கு ஒன்று அதில்

 சிக்கியவருக்கு ஆண்டனாவும்

 தேவையில்லை ஆளும்

 தேவையில்லை எல்லாமே

 அன்லிமிடெட்...


Saturday, August 12, 2023

முகமறிய ஆவல் by Veena Shankar



 முகமறிய ஆவல்


அனைத்து பாலரும் படிக்கும் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக சேர்ந்தாள் ஆனந்தி. எப்போதும் அவள் பர்தா போட்ட உடையிலேயே வருவது வழக்கம். அதனால் அவளுடைய கண்கள் மட்டுமே அறிவர் எவரும். அவள் உடைக்கும் பெயருக்கும் சம்பந்தம் இல்லை என்பதால் பலரும் அவள் உண்மை முகம் காண ஆவலாய் இருந்தனர்.


 இதைப்பற்றி அவளிடம் கேட்டாலும் சிரிப்பை உதிர்த்து சென்று விடுவது அவள் வழக்கம். இதனால் அவள் முகம் காண ஆசைப்பட்ட ஒரு மாணவன் சக மாணவர்களோடு ஆனந்திக்கு தெரியாமல் அவளுடைய அலைபேசியை எடுத்து அதில் அவள் முகத்தை காண, அதிலும் ஏமாற்றமே மிஞ்சியது. ஆம். அவள் எடுத்திருந்த புகைப்படத்தில் அவளுடைய ஒரு கண் அல்லாது மற்றவை ஏதாவது ஒன்றால் மறைக்கப்பட, ஏமாற்றமே மிஞ்சியது என்றாலும் மேலும் அவள் முகம் காண ஆவல் அவர்களிடையே அதிகமாகியது. ஆனந்தியை பற்றி தங்களுடைய வேறு பேராசிரியர்களிடம் கேட்க, அவர்களுக்கு உண்மை தெரிந்திருந்தாலும் இவர்களை திட்டியது தான் மிச்சம். ஆனால் அதில் ஒருவர் மட்டும் ஆனந்திக்கு அடிக்கடி முகம் கழுவும் பழக்கம் உள்ளது என்று நாசூக்காக சொல்ல, நேரம் கிடைக்கும் போது அவளை கண்காணித்து வந்தனர் மாணவர் கூட்டம்.


இதற்கிடையே மாணவர்களோடு சுற்றுலா செல்ல ஆனந்தியும் சேர்க்கப்பட்டிருந்தாள். இம்முறை வாய்ப்பை தவற விட கூடாது என்பதில் மாணவர்கள் கவனமாய் இருந்தனர்.


அவர்கள் நினைத்தது போலவே முகம் கழுவ தன் முக உடையை ஆனந்தி விலக்க, கேமரா கையுமாக அலைந்த மாணவன் ஒருவன் அவளை படம் பிடிக்க, ஆனந்தியின் உண்மை முகம் கண்டு முகம் வெளிர்ந்தான். சொல்ல முடியாத அளவிற்கு அவள் முகம் சிதைந்திருந்தது. புகைப்படம் எடுத்த போது வந்த வெளிச்சம் ஆனந்திக்கு தெரிய, அவள் திரும்பியதும் அவள் முகம் தெள்ளத்தெளிவாக மாணவர்களுக்கு பதிவாகியது. பிறகென்ன வேறு வழியில்லாமல் அவளுடைய ஃபிளாஷ் பேக் மாணவர்களிடையே ஓடியது .


ஆனந்தி பார்ப்பதற்கு மிகவும் அழகு. நாகரீமான உடையாகட்டும், புடவையாகட்டும் இரண்டிற்கும் பொருத்தமானவள் தான். அவள் பெண்கள் மட்டுமே படிக்கும் கல்லூரியில் படித்து வந்தாலும் அவளை பார்க்கும் மாணவிகளும் அவளின் அழகில் மயங்கி தானும் ஆணாக இருந்திருந்தால் அவளை காதலித்து திருமணம் செய்து கொண்டிருப்பர் என்று தங்களுக்குள் பேசிக் கொள்ளும் அளவிற்கு 

அவளுடைய மிடுக்கான நடையும் குதிரை வால் போட்ட முடியும் மாம்பழ நிற மேனியும் இதழ் விரிய சிரிக்கும் சிரிப்பும் நெற்றியில் சிறிய சிவப்பு நிற பொட்டும் ஹை ஹீல்ஸ் போட்ட செருப்பும் காதிலும் கழுத்திலும் ஆடம்பரமில்லா நகையும். ஒரு கையில் வளைகள் இல்லா கரமும் மறு கையில் கைக்கடிகாரமும் அழகே! இவளை கவி மட்டுமே வர்ணிக்க வேண்டிய அவசியமில்லை. சாதாரண பிறவிக்கும் சாத்தியமே!


இவ்வாறு வீட்டில் தேவதையாகவும் வெளியில் பதுமையாகவும் வலம் வந்தாள் ஆனந்தி.


அப்போது தான் அந்த கோர சம்பவம் நடந்தது. ஆனந்தி கல்லூரியில் இறுதியாண்டு படித்த சமயம் , சுற்றாலாவில் கலந்து கொண்ட போது, மலையை ரசித்தபடி அவள் நின்றிருக்க, அவளுடைய தோழி ஒருத்தி அவளை திடீரென்று பயமுறுத்த, தன் கட்டுப்பாட்டை இழந்து அவள் மலையிலிருந்து உருண்டு விழ, உயிர் மட்டுமே மிஞ்சியது சிதைந்த முகத்தோடு. அவளின் அருவெறுப்பான முகத்தால் அவள் நிராகரிக்கப்பட்டாலும் அதற்கு கலங்காத அவள், மேற்படிப்பு படித்து இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறாள்.


இவ்வாறே தான் எழுதி வந்த தொடர்கதையை முடித்தார் எழுத்தாளர் கிருஷ்ணா என்ற கிருஷ்ணவேணி , தன் நிஜ முகமூடியையும் கழற்றி விட்டு. இன்றுவரை யாருக்கும் தெரியாத அவருடைய நிஜக் கதை அடுத்த வார இதழில் வெளியாகும் என்றும் கதை படித்தவர்கள் யாரும் தனக்காக ஆதங்கப்பட வேண்டாம் என்றும் முடித்திருந்தார். 


அவர் உயிர் பிரிய காத்திருக்கும் வேளையில் தான் தன் உண்மை கதையை மற்றவரிடம் பகிர்ந்தார். 


அவருடைய நிஜக் கதையும் நிஜப் பெயரும், முகமறிய ஆவல் கொண்ட நெஞ்சங்களின் முகத்தை கண்ணீரில் நினைத்தது.

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...