நாள் முழுவதும் உன்னை
வார்த்தைகளால் நான் வஞ்சித்தாலும்
இரவை ரசிக்க நீ வேண்டும் அது
ருசிக்க நானும் வேண்டும்.
வா! வா! இன்றே வா! விடிந்து விடப்
போகிறது, நாளை நம் மகனுக்கு
அவ்வறை வேண்டுமல்லவா?
பலராலும் சிலாகித்து பேசப்பட்ட
விசயமானாலும் எவராலும்
வெளிப்படையாக பகிர முடியாத
ஆனந்தம் இந்த பந்தம்.
கலவியை பாடியோர் பலர்
அனுபவத்தை பகிர்ந்தோர் சிலர்
உணர்வுக்கு வெற்றி கொடுப்பவர் பலர்
உணர்ச்சிக்கு தோல்வி கொடுக்கும்
சிலர்
தனித்து விடப்பட்ட வேளையில் பலர்
தவிர்த்து வாழ்பவர் சிலர்
இரவின் மடியில் நிம்மதியாய் பலர்
இரவே சூனியமாய் சிலர்
அருகில் ரசிப்பவர் பலர்
அகதளம் செய்வார் சிலர்
இம்மையில் மறுமை வேண்டுவோர்
பலர்
இம்சையில் பொறுமை கொள்பவர்
சிலர்

No comments:
Post a Comment