கொஞ்சியது அழகு
விஞ்சியது வீரம்
துஞ்சியது உடல்
அஞ்சியது மனம்
கெஞ்சியது காலம்
மிஞ்சியது காதல்
எஞ்சியது நினைவு
எதிர்காலம் பின் நிற்க கடந்த காலமும்
சொல்வதென்ன?
அவன் மேல் உள்ள காதலையா?
தன் நிலை அவனுக்கு தெரிந்தால்
எதிர்நோக்கும் விளைவையா?
அதனால் வரும் மன உளைச்சலையா?
சொல்ல முடியாத உணர்வையா?
தன்னிலை மறப்பதும்
இயலாமையிலா?
ஏன் இந்த குழப்பம்?
முதல் திருமண வாழ்க்கை
முடங்கியதால்
தற்போது எழும் முனகல்

No comments:
Post a Comment