எங்கும் நீல வான் சூழ வெண்
மேகங்கள் மலைக்கு குடைப்பிடிக்க
மரங்கள் ஆட காற்றாலை வந்து சுற்ற
மேகங்கள் மெல்ல அசைய விழித்த
மலை யார் அங்கே அந்த மரங்களை
மெல்ல ஆட சொல்லு ரொம்ப குளிருது
என்று மேகத்தை இழுத்து மூடி தூங்க
மீண்டும் மேகம் அசைய எட்டிப்பார்க்க
வந்தது சூரியன் வேறென்ன செய்ய
என வணங்கிய மலையை பார்த்து
சிரித்த காற்றாலை மீண்டும்
வேகமாக சுற்றியது.அங்கு சென்ற
ரயில்ப்பெட்டிக்கு கையசைத்தவாறு.

அருமை வித்யா
ReplyDeleteநன்றி வீணா
ReplyDelete