நீயும் யாரோ?
சங்கோஜப்படாமல் அமர்ந்து
கொள்ளேன் என் பக்கத்தில்
என்னுள்ளும் இருப்பதால் எளிதில்
நீங்கிட மாட்டாயே?
நீ அழிந்து விடுவாய் என்ற மிரட்சியும்
கொள்வாயோ?
என் பக்கம் நீ இருக்கும் வரை என்
நிழலும் என்னோடுதானோ?
இடம் காணவில்லையா? சொல், நான்
சிறுத்துக் கொண்டு உனக்கு
இடமளிக்கிறேன்
என்னை விட்டு நீங்காதே! காதலனுக்கு
வாக்கு கொடுத்துள்ளேன் நீயே
அவனென்று
நீயும் யாரோ?
கடவுளும், மனிதனும்
விதையை விருட்சமாக்குவதும் நீயே!
அதை அழிக்க நினைப்பதும்
மனிதனே!
பேசாமல் காப்பது நீயே !
பேசியே கொல்வதும் மனிதனே!
முடியாததை நிகழ்த்துபவனும் நீயே!
முடிவதை செய்யாமல் இருப்பதும்
மனிதனே!
பரவசம் கொள்ள செய்வதும் நீயே!
பாசாங்கு செய்வதும் மனிதனே!
சிலையாய் உறைபவனும் நீயே!
பேச்சால் உறைய வைப்பவனும் மனிதனே!
கற்று கொடுப்பதும் நீயே!
அறிவுரை கேளாமல் விடுவதும்
மனிதனே!
காதலில் தோல்வி அறியாதவனும் நீயே!
காதல் தோல்வியால் மரமாவதும் மனிதனே!
காக்க துடிப்பவனும் நீயே!
தவறு புரிபவனும் மனிதனே!

No comments:
Post a Comment