எதில் திருப்தி
சாதம் நன்றாக குழையவில்லை
பருப்பிற்கு நெய் விடவில்லை
ரசத்தில் காரம் இல்லை
பருப்பு குழம்பில் உப்பு இல்லை
மோர்குழம்பில் தேங்காய் போதவில்லை
வத்தகுழம்பில் சுண்டைக்காய் நிறைவாய் இல்லை
பொரியலில் கடுகு பொரியவில்லை
உசிலி நன்றாக வேகவில்லை
அரைத்துவிட்ட குழம்பில் மசாலா காணவில்லை
காரக்குழம்பில் நிறம் இல்லை
புளிக்குழம்பில் புளிப்பு போதவில்லை
துவையல் சரியாக அரைபடவில்லை
அவியலில் மணம் இல்லை
கூட்டில் காய் பொருத்தமாய் இல்லை
சித்ரான்னத்தில் வேர்க்கடலை போடவில்லை
எதிலும் கொத்தமல்லி வாடையில்லை
இனிப்பை வாயில் வைக்க முடியவில்லை
வடையில் அதன் வடிவமில்லை
பாயசத்தில் இனிப்பு தெரியவில்லை
அப்பம் மிருதுவாக இல்லை
அப்பளம் பெரியதாக இல்லை
வடகம் நன்றாக வருபடவில்லை
மோர் மிளகாய் கறுக்கவில்லை
தயிர் கெட்டியாக உறையவில்லை
முதலில் சாப்பிட வாழைப்பழமும் இல்லை
நிறைவாய் குடிக்க தண்ணீரும் ருசிக்கவில்லை
என்று சொல்ல எனக்கு வாய்ப்பில்லை.
எதிலும் திருப்தியே கல்யாண சாப்பாட்டில்

No comments:
Post a Comment