வாழ்க்கையின் நடையே!
ஓய்வில்லா நடையும்
நிறைவில்லா மனதும்
உடனில்லா நட்பும்
உறவில்லா தருணமும்
உரிமையில்லா நாளும்
மாசில்லா செயலும்
மறக்க இயலா நினைவும்
குன்றிவிடும் அறிவும்
குறிப்பிடா வருத்தமும்
வகைப்படுத்தா நோயும்
உறங்கா விழிகளும்
தெரியா அழுகையும்
காக்கும் கரங்களும்
கைவிடும் செல்வமும்
கழிக்கும் நிமிடங்களும்
கடக்கும் நிகழ்வுகளும்
வாழ்க்கையின் நடையே!

No comments:
Post a Comment