பச்சை விளக்கில் வளர்ந்த பச்சை
கொடிகள்
சிறு ஒளி கூட போதும் இருளை போக்க
பசுமை வளர்க்க
சந்திரன் இல்லா இடத்தில் இரவு
விளக்கும் ஒளி கொடுக்க,
அந்நேரம் பக்கம் இருந்த கொடியும் படர
இடம் தேட ,
அந்த விளக்கு ஒளியே கொடியின்
பேச்சுக்கு செவி கொடுக்க
கொடியும் விளக்கில் ஒய்யாரமாய்
நிதமும் படர, அந்த விளக்கு ஒளியும்
மங்கியது
தன் நிலை மறந்து. இருட்டை நீக்கிய
விளக்கு இன்று காணாமற் போனது
கொடியின் ஆழ்ந்த பிரவேசத்தால்

No comments:
Post a Comment