Wednesday, August 9, 2023

மைக்ரோ மினி உலகம்-7 by Vidhya Nivash

 


நேர்கொண்ட பார்வையில் கால்

 அடியில் விரிந்து கிடந்த பூ

 மெத்தையை மறந்து செல்ல.அதன்

 வண்ண உடல் என்னை சுண்டி இழுக்க

 அதன் மயக்கத்தில் செல்லும் வழியில்

 சட்டென நிமிர்ந்தால் நெடுநெடுவென

 வானை தொட ஏணி இல்லாமல் ஏறும்

 ஒற்றை சுந்தரி.வளைவு நெளிவு

 இல்லாமல் நேராக நிற்கிறாள் யார்

 துணையும் தேவையில்லை என்றோ.

 ஆனாலும் உன் வெள்ளை முகம்

 மட்டும் ஏன் வெட்கத்தில் தலைகுனிய..

 மண்ணை ரசிக்கவா இல்லை

 மன்னனை மண்ணில் தேடுகிறாயோ!

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...