வறட்சி
சொல்லின் வறட்சியே பிறர் ஆதிக்கத்தில்
நாவின் வறட்சியே அதன் பொருளில்
அழகின் வறட்சியே காணும் உடலில்
கற்பனையின்
வறட்சியே வரையும் கவிதையில்
எண்ணத்தின் வறட்சியே கொள்ளும் தவிப்பில்
ஒளியின் வறட்சியே ஆழ்ந்த இருளில்
தண்ணீரின் வறட்சியே கடுமையான தாகத்தில்
பொருளின் வறட்சியே செய்யும் குற்றத்தில்
திறமையின் வறட்சியே அடையும் தோல்வியில்
சோம்பலின் வறட்சியே பெரும் வளர்ச்சியில்
வாய்மையின் வறட்சியே காணும் மருளில்
அழற்சியின் வறட்சியே அதன் முன்னேற்றத்தில்
எதுவும் பாலைவனம்
ரயில் பயணங்களில் நாம் ரசிக்கும் பாடலை பாடுபவர் வாழ்க்கையில் பாலைவனம்
சாலையில் கம்பு வைத்து வித்தை காட்டுபவ ர் வாழ்க்கையில் பாலைவனம்
அரிதாரம் பூசி கடவுள் வேடமிட்டு வருவோரின் வாழ்க்கையில் பாலைவனம்
அழகோவியமாய் இருந்தும் கரகம் பிடித்து ஆடுவோரின் வாழ்க்கையில் பாலைவனம்
வீதியில் கச்சேரி நடத்தும் விழியிழந்தோரின் வாழ்க்கையில் பாலைவனம்
செல்வம் இருந்தும் நல்ல நட்பு கிடைக்காமல் தவிக்கும் செல்வந்தர்களின் வாழ்க்கையில் பாலைவனம்
காட்டு மரங்களை அழித்து மருத்துவங்களை இழப்பது மனித வாழ்க்கையில் பாலைவனம்
மண்ணில் சிறு உயிரினங்களை சிதறடிப்பது அதன் வாழ்க்கையில் பாலைவனம்
கடற்பரப்பில் காணும் வானளாவிய நீர் இருந்தும் அருந்த முடியாதது தாகத்திற்கான பாலைவனம்
உதவ பணம் இருந்தும் அதை விரும்பாதது பணக்காரர்களின் மனத்தின் பாலைவனம்
இதைப் போலவே பல இருந்தும் அதை வெளிக்கொணர்வதில் என் சிந்தைனையில் பாலைவனம்
பாலைவனத்திலும் பூக்கள் பிறக்கும் பகலவன் தன்னை விலக்கிக் கொண்டால்
பாலைவனத்திலும் நீர் ததும்பும் வருணன் அருள் புரிந்தால்
பாலைவனத்திலும் வாழ முடியும் வெப்பத்தை எதிர்க்கும் திறன் இருந்தால்
பாலைவனத்திலும் வெள்ளை இருப்புப் பாதை போட்டது யார் மனிதனா? படைத்தவனா?
அங்கே தெரியும் மணற்குவியலே ரயில் நிலையமா? பயணியர் இல்லாத நிலையா?

No comments:
Post a Comment