Thursday, April 13, 2023

ஏன் ஓடுகிறாய் மனமே! by Veena Shankar



 ஏன் ஓடுகிறாய் மனமே!


ஏன் ஓடுகிறாய் மனமே!

அசையும் செல்வத்தின் பின்னால்


ஏன் ஓடுகிறாய் மனமே!

அடுத்தவர் இடத்தை கைப்பற்றும் வரை


ஏன் ஓடுகிறாய் மனமே!

சுயமாய் சிந்திக்கும் திறன் இருக்கும் வரை


ஏன் ஓடுகிறாய் மனமே!

ஆதரவாய் பற்ற கரம் ஏற்கும் வரை


ஏன் ஓடுகிறாய் மனமே!

சிம்மாசனத்தை அடையும் வரை


ஏன் ஓடுகிறாய் மனமே!

நிம்மதியை தொலைத்து மதி செயலிழக்கும் வரை


ஏன் ஓடுகிறாய் மனமே!

வாழ்வு வெறுமை என்று உணரும் வரை


ஏன் ஓடுகிறாய் மனமே!

விதி முடிந்த பின்னும் நினைவாலயம் வேண்டும் என்று எண்ணும் வரை

 

ஓட்டம்


ஏன் ஓடுகிறது மனம் மதிப்பில்லா 

நிம்மதியை தேடி


ஏன் ஓடுகிறது உடல் சோம்பலரியா

ஓய்வை தேடி


ஏன் தடுமாறுகிறது கரங்கள் தன்

பொறுப்பை ஒப்படைக்க


ஏன் தளர்கிறது கால்கள் மனதின் தடுமாற்றத்தை மெய்ப்பிக்க


ஏன் சிலிர்க்கிறது சதைகள் கள்ளமில்லா

பாசத்தை பகிர


ஏன் பதைக்கிறது நாடிகள்

தன்னை பற்றும் மனிதரை நாடி


ஏன் இழந்தது உயிர் வாழ்க்கையின் முடிவே அது என்பதால்

2 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...