தேன் பெயரென்பதாலோ இனிக்கிறது,
கனத்த இதயத்தை இறக்கி வைக்க
முடிகிறது. பாதி மனிதர்களுக்கு
காலை நேர சிற்றுண்டி ஆகிறது,
இடைவேளை பானமாய் இருக்கிறது.
களைப்பை போக்கவும் துக்கத்தை
மறக்கவும் தூக்கத்தை விரட்டவும்
இருக்கும் அரு மருந்து. மருந்து
என்பதால் மூன்று வேளைக்கு மட்டுமே
அனுமதி. அதிகமானால் உடலின்
உபாதைக்கு அனுமதி இலவசம்

No comments:
Post a Comment