நிறையா? குறையா?
காலி புட்டிகளில் இருப்பது காற்று என்பது நிறையா? அல்லது ஒன்றுமில்லாததால் குறையா?
பாதி கோப்பையில் இருப்பது தண்ணீர் என்பது நிறையா? அல்லது அது வழிந்து ஓடவில்லை என்பது குறையா?
ஒரு கண்ணை மூடினால் காணும் காட்சியில் குறையா? ஒன்றே ஆனாலும் காண முடிகிறதே என்பது மனதின் நிறையா?
முற்றிய கனியை உண்ண முடியவில்லை என்பது குறையா? அல்லது அடுத்த விருட்சத்திற்காக தயாராகிறது என்பது நிறையா?
எழுதிய பக்கங்கள் தீர்ந்து விட்டது என்பது குறையா? பாடத்தை சிறப்பாக புரிந்து கொண்டோமே என்பது நிறையா?
பருவநிலை மாற்றம் கொள்வது குறையா? அல்லது சூழ்நிலைக்கு மாற மனிதன் பழகுகிறான் என்பது நிறையா?
காற்றின் வேகத்தில் மகிழ்வது நிறையா? அல்லது தூசியை வாரி இறைக்கிறதே என்பது குறையா?
வேப்பிலை கசப்பு என்பது குறையா? அல்லது அது மருந்தே என்பது நிறையா?
கடந்த வாழ்வை நினைப்பது குறையா? அல்லது பட்ட வலியை மறப்பது நிறையா?
மாற்றமடையா மனது நிறையா? அல்லது மனிதனின் குணத்தை பறைசாற்றுவதால் அது குறையா?
பார்ப்பவர் கண்களின் நோக்கமே நிறையும் குறையும்

No comments:
Post a Comment