தோழியும் நீ
தோழனும் நீ
என் மனதையும் அறிவையும் திறக்கும்
சாவியும் நீ
என் அருமை புத்தகமே
காகிதத்திற்கு உயிரும் உருவமும்
கொடுத்தவன் நீ
காட்சிகளை கண் முன்னே தந்து
குளிர,வியர்க்க,நடுக்க செய்தவன் நீ
உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து
உலகை காட்டியவன் நீ
எளியவனுக்கு எளியவன்
வல்லவனுக்கும் எளியவன் நீ
உன்னை பருக பருக எழுத தூண்டும்
தூண்டில் நீ
உன் துணை போதும் தனிமையை
மறக்க.

No comments:
Post a Comment