Saturday, April 22, 2023

ஒன்றில் பல by Veena Shankar

 


தான் மட்டுமல்ல தன் மீதிருந்த புழுதிகளையும் தான் சந்தித்த அவமானங்களையும் சேர்த்தே கூண்டிலிருந்து வெளிப்பட்டாள் தன் முன்னே நிழலாடிய நினைவகளோடு கூடிய இந்த நிஜ மங்கை.


வாயிற் கதவு திறந்து பல வருடங்கள் ஆயின, வார்த்தையும் வரவில்லை, அவளுக்கு வசந்தமும் கிடைக்கவில்லை அவளுக்கு முன்னால் ஓட்ட பந்தய வீராங்கனைகள் பலர் இருந்ததால்


 ஒற்றுமைக்கு அடையாளம்


தன் உடல் பருமனால் கூண்டை விட்டு வெளி வாராத பறவையோடு இந்த சின்னஞ்சிறிய பூச்சிகளும் அடைபட்டனவே வெளிவர பாதை இருந்தும்.


 கூண்டின் வேண்டுகோள்


பறவையின் சிறகை போல உங்கள் மனதை இலகுவாக்குங்கள் பெண்களே! 


பறவையின் அலகைப் போல தீர்க்கமாய் முடிவெடுங்கள் பெண்களே!


பறவையின் கால்களை போல வாய்ப்புகளை வலிமையாக பற்றிக் கொள்ளுங்கள் பெண்களே!


நானோ பயனில்லை. கோபுரத்தில் ஒய்யாரமாய் அமருங்கள் பெண்களே!


ஓராயிரம் கதை சொன்னாலும் ஒளி உங்களிடம் பிறக்க வேண்டும் பெண்களே!


இரும்புக் கதவேயானாலும் வலுவான சிறகுகள் இருந்தால் வழியெல்லாம் வசந்தம் தான்


பெண்களை நேசியுங்கள்


கரம் பிடித்த கணவன் காரிருளில் கண்ணாடி வளைகள் நொறுங்க செய்த பின் நண்பனுக்கும் விருந்தாக்குவதென்பது கொடுமை. தடம் மாற விரும்பாத பெண்களும் சூழ்நிலையாலும் பொருளாதாரத்திற்காகவும் கைதிகளாய் மாறுவது ஆண்களின் கையிலும் அதை மாற்றுவதும் அவர்கள் பொறுப்பு. சட்டங்களுக்கும் விதிகளுக்கும் மாற்றங்கள் உள்ளது போலவே இதுவும். இருந்தாலும் தனி மனிதனுடைய மனப்போராட்டம் வெற்றி பெற ஆண்களே பெண்களை நீங்கள் நேசிக்க பழக வேண்டும் என்பதே சிறப்பான முடிவு

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...