கனவுகளுக்கு எல்லையே இல்லையே
கனவோடு முயற்சியை கைவிடாமல்
செய்ய கண்டிப்பாக அது
கைக்கூடும்.நம்மை நமக்கு
அடையாளம் காட்ட நல்ல நட்பு வட்டம்
தேவை அவர்கள் நம் மீது வைக்கும்
நம்பிக்கையே நம்மை வழி
நடத்தும்.வாய்ப்புக்கள் பல வந்தும்
அதை உடன் இருப்போருக்கு பகிரும்
குணம் என்ன வென்று சொல்வது.
தான் வளர்வது மட்டுமில்லாமல் உடன்
வரும் ஒட்டுண்ணி செடிக்கு
கைக்கொடுத்து தழைக்கவிட்டு அழகு
பார்க்கும் மரம் போல் இரண்டு
அழகான ஜாம்பவான்கள் மற்றும்
என்னை ஊக்கப்படுத்திய
விண்மீன்கள் குழுவிற்கும்
,இலைமறை காய் போல்
தாய் தந்தையர் மற்றும் குடும்பத்தின்
ஆதரவால் என்னுடைய கனவு
மேடையை அடைந்தேன் நேற்று.ஒரு
புது பயணத்திற்கு அடிக்கோடிட்ட
அனைத்து நல் உள்ளங்களுக்கும்
மிக்க நன்றி.முதல் வாய்ப்பை
கொடுத்து கௌரவித்த
ஓடிவிளையாடு குழுவிற்கும் மிக்க
நன்றி.

No comments:
Post a Comment