Wednesday, April 26, 2023

ரம்மியம் by Vidhya Nivash

 


சலசலக்கும் வாய்கால் தண்ணீர் ஓட்டம்

வெயிலின் சாரலை மறக்கடித்த

 வேப்பமர காற்று வாயை மெல்ல

 அசைத்து உண்டதை செரிக்க

 நண்பர்களுடன் வட்ட மேஜை மாநாடு

 மாதிரி அமர்ந்திருந்த நான்கு கால்

 மனுஷங்க முதல்முறையாக கண்ட

 காட்சி பசியை போக்கவா அல்லது 

 அன்னையின் மடியில் விளையாட்டோ

 முட்டி முட்டி பாலை அருந்தும்

 கன்றுக்குட்டி அவளுக்கு மடி

 வலிக்குமோ இல்லையோ

 பிள்ளையின் விளையாட்டை ரசிக்க

 அசையாமல் நிற்கிறாள்..

மன்னிக்கவும் தாயே கொஞ்சம்

 அநாகரீகம் தான் அழகை ரசித்து

 புகைப்படம் எடுத்தேன்.

கிராமத்து ரம்மியத்தில் மனதை

 தொலைத்தேன்..



1 comment:

  1. படமும் எழுத்தும் அருமை வித்யா

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...