Wednesday, April 26, 2023

ரம்மியம் by Vidhya Nivash

 


சலசலக்கும் வாய்கால் தண்ணீர் ஓட்டம்

வெயிலின் சாரலை மறக்கடித்த

 வேப்பமர காற்று வாயை மெல்ல

 அசைத்து உண்டதை செரிக்க

 நண்பர்களுடன் வட்ட மேஜை மாநாடு

 மாதிரி அமர்ந்திருந்த நான்கு கால்

 மனுஷங்க முதல்முறையாக கண்ட

 காட்சி பசியை போக்கவா அல்லது 

 அன்னையின் மடியில் விளையாட்டோ

 முட்டி முட்டி பாலை அருந்தும்

 கன்றுக்குட்டி அவளுக்கு மடி

 வலிக்குமோ இல்லையோ

 பிள்ளையின் விளையாட்டை ரசிக்க

 அசையாமல் நிற்கிறாள்..

மன்னிக்கவும் தாயே கொஞ்சம்

 அநாகரீகம் தான் அழகை ரசித்து

 புகைப்படம் எடுத்தேன்.

கிராமத்து ரம்மியத்தில் மனதை

 தொலைத்தேன்..



1 comment:

  1. படமும் எழுத்தும் அருமை வித்யா

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...