சலசலக்கும் வாய்கால் தண்ணீர் ஓட்டம்
வெயிலின் சாரலை மறக்கடித்த
வேப்பமர காற்று வாயை மெல்ல
அசைத்து உண்டதை செரிக்க
நண்பர்களுடன் வட்ட மேஜை மாநாடு
மாதிரி அமர்ந்திருந்த நான்கு கால்
மனுஷங்க முதல்முறையாக கண்ட
காட்சி பசியை போக்கவா அல்லது
அன்னையின் மடியில் விளையாட்டோ
முட்டி முட்டி பாலை அருந்தும்
கன்றுக்குட்டி அவளுக்கு மடி
வலிக்குமோ இல்லையோ
பிள்ளையின் விளையாட்டை ரசிக்க
அசையாமல் நிற்கிறாள்..
மன்னிக்கவும் தாயே கொஞ்சம்
அநாகரீகம் தான் அழகை ரசித்து
புகைப்படம் எடுத்தேன்.
கிராமத்து ரம்மியத்தில் மனதை
தொலைத்தேன்..

படமும் எழுத்தும் அருமை வித்யா
ReplyDelete