Friday, April 14, 2023

ஒற்றை மரமே நீ by Veena Shankar

 


ஒற்றை மரமே நீ


எத்தனை மனிதரின் கோடை தாகத்தை தீர்க்கிறாய்


எத்தனை மனிதர்களுக்கு நிழலாய் இருக்கிறாய்


எத்தனை மனிதருக்கு இருப்பிடமாக உன் இறக்கைகளை மாற்றுகிறாய் 


எத்தனை உயிர்கள் வாழ உன் அடிவாரத்தில் அனுமதிக்கிறாய் 


எத்தனை மனிதர்களுக்கு உன் சுவையை அமிர்தமாக்குகிறாய்


எத்தனை கலைஞர்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கிறாய்


எத்தனை முறை உன்னை பிளந்தாலும் மனிதன் நினைக்கும் வடிவம் கொடுக்கிறாய்


எத்தனை முறை வீழ்ந்தாலும் உயிர்த்தெழுந்து காற்றை சுத்தப்படுத்துகிறாய்


வினாவல்ல விடையுமல்ல , பிரமிப்பூட்டும் இயற்கையின் கொடையே நீ ஒற்றை மரமே

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...