ஒற்றை மரமே நீ
எத்தனை மனிதரின் கோடை தாகத்தை தீர்க்கிறாய்
எத்தனை மனிதர்களுக்கு நிழலாய் இருக்கிறாய்
எத்தனை மனிதருக்கு இருப்பிடமாக உன் இறக்கைகளை மாற்றுகிறாய்
எத்தனை உயிர்கள் வாழ உன் அடிவாரத்தில் அனுமதிக்கிறாய்
எத்தனை மனிதர்களுக்கு உன் சுவையை அமிர்தமாக்குகிறாய்
எத்தனை கலைஞர்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கிறாய்
எத்தனை முறை உன்னை பிளந்தாலும் மனிதன் நினைக்கும் வடிவம் கொடுக்கிறாய்
எத்தனை முறை வீழ்ந்தாலும் உயிர்த்தெழுந்து காற்றை சுத்தப்படுத்துகிறாய்
வினாவல்ல விடையுமல்ல , பிரமிப்பூட்டும் இயற்கையின் கொடையே நீ ஒற்றை மரமே

No comments:
Post a Comment