Thursday, April 27, 2023

படமும் சிந்தனையும் by Veena Shankar

 


ஊடு கதிர்வீச்சு மூலம் படம் பிடித்தாலும் காண முடியாது இந்த அன்னை வயிற்றில் உள்ள வளர்ந்த சிசுவை


செதுக்கிய மரத்திலே பதுங்கிய ஒரு உயிர்


களம் காண பயிற்சியாம் வயிற்று பட்டறையிலிருந்து ஆரம்பம் தாயிடமிருந்து சேய்க்கு


உயிரோ, உயிரின் ஓட்டமோ


ஓட்டமோ, சேய்க்கு பயிற்சியோ


பயிற்சியோ, கலைஞனின் கலையோ


கலையோ, சுவற்றில் நிழலோ


நிழலோ, நிஜத்தில் பெரியதாய்


கொண்டவனோ? கொடுத்தவனோ?

படைத்தவனோ?

பார்த்தவனோ?

ரசித்தவனோ?

யாசித்தவனோ ?

எவனோ ஒருவன்

எதற்காக அவன்

மெய் சிலிர்க்க வைத்தான்

போரில் வதைப்பதிலும்

அவனை நான் கவர்ந்ததிலும்

பரியானாலும் என்னை பார் என்று 

சொல்லி பாரை அழைத்தான்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...