ஊடு கதிர்வீச்சு மூலம் படம் பிடித்தாலும் காண முடியாது இந்த அன்னை வயிற்றில் உள்ள வளர்ந்த சிசுவை
செதுக்கிய மரத்திலே பதுங்கிய ஒரு உயிர்
களம் காண பயிற்சியாம் வயிற்று பட்டறையிலிருந்து ஆரம்பம் தாயிடமிருந்து சேய்க்கு
உயிரோ, உயிரின் ஓட்டமோ
ஓட்டமோ, சேய்க்கு பயிற்சியோ
பயிற்சியோ, கலைஞனின் கலையோ
கலையோ, சுவற்றில் நிழலோ
நிழலோ, நிஜத்தில் பெரியதாய்
கொண்டவனோ? கொடுத்தவனோ?
படைத்தவனோ?
பார்த்தவனோ?
ரசித்தவனோ?
யாசித்தவனோ ?
எவனோ ஒருவன்
எதற்காக அவன்
மெய் சிலிர்க்க வைத்தான்
போரில் வதைப்பதிலும்
அவனை நான் கவர்ந்ததிலும்
பரியானாலும் என்னை பார் என்று
சொல்லி பாரை அழைத்தான்

No comments:
Post a Comment