மறைவாய் அளித்த கடிதம் மறக்காமல் காதலியின் உள்ளத்தில் போய் மாற்றத்தை கொடுக்குமா?
நானும் மறைந்திருந்து பார்க்கவா? இல்லை மன்றாடி பார்க்கவா?
நினைவு மறக்காமல் அவள் விடையை எதிர்நோக்கும் நானும் நானோ?
இல்லை
மடல் மூலம் சென்றது என் வார்த்தைகள் மட்டுமல்ல என் உயிர் மூச்சும் தான்.
என்னிடமே என்னைக் கொள்வதும் அவளிடமே என்னை ஒப்படைப்பதும் அவள் அளிக்கும் விடையே!
பிரிந்த உறவுக்கான மறுபரிசீலனை மடல் மூலம்
பரிதவிப்பு கொண்டாலும் அன்றைய காதல் சுகமானது சுகவீனமான நெஞ்சங்களுக்கு

கரெக்டா சொன்னீங்க அப்ப எல்லாம் ஒரு க்ரீட்டிங்ஸ் கார்டு வாங்கி வச்சுட்டு எப்ப வெளியே வருவாங்க அப்படின்னு ஃபாலோ பண்ணி கொடுக்கலாமா வேண்டாம் என்று யோசிப்பதற்குள்ள ஒரு வருஷம் ஓடிரும் இப்ப எல்லாம் whatsapp facebook என்று மாறி போச்சு ---சூப்பர் வீணா
ReplyDeleteநன்றி🙂
Delete