Saturday, November 18, 2023

படமும் கருத்தும் by Veena Shankar



 ஓர் உருவமாய்

ஓர் உயிராய்

ஓர் மனதால்

பிறந்த

ஓர் உயிர்


தவிப்பறியா மழலை

தவித்த மனதிற்குள்

தாவி வந்ததும்

தாலி நிலைத்தது

அவளுக்கு


 தாலாட்டு பாடாமல் உறங்கினாயோ?


தாயை உறக்கத்தில் கண்டு

 கொண்டாயோ?


அவள் சேலையின் மணத்தை அறிந்த

 நீயும் 


அவள் மூச்சை தேடினாயோ?


பசித்த பொழுதில் மட்டும் அவள் அருமையை

 அறிந்தாயோ?


உறக்கத்தில் அழுத நீயும் அவள்

 வருகையை எதிர்பார்த்தாயோ?


உறக்கம் மட்டுமே சொந்தமல்ல

 உனக்கு 


இந்த அகவையில் 

உன் சிரிப்பும் அழகே! 


அதை ரசிக்க நானும் பொறாமை

 கொண்டேன் நானும் உன்னைப்போல்

 ஆகிட

2 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...