Thursday, April 13, 2023

பாலைவனம் by Vidhya Nivash

 


பாலைவனமா ? வறட்சியா?

 யார் சொன்னது அந்த நீலநிற

 வானும், அலை அலையாய்

 காற்றின் ரேகை பதிந்த மண்ணும்,

மணற்மேடுகளும் சொன்னது அந்த

 பூமியின் வளத்தை,பல அடி ஆழத்தில்

 ஊறும் ஊற்றின் தண்ணீர் சொன்னது

 என் பக்கத்தில் ஓடும் பாறை

 எண்ணெயின் சத்தம் கேட்கவில்லை

 உங்களுக்கு நான் சந்தைக்கு வந்து

 அந்த நீலவானை தொடும் அளவிற்கு

 வளருவோம்,காணும் இடமெல்லாம்

 பூத்துக்கூழுங்க எங்களை காண

 அலை மோதும் மக்கள் வெள்ளம்

 அதற்கு இங்கே சிந்தும் ஒவ்வொரு

 உழைப்பாளியின் வியர்வையே சாட்சி..

கடின உழைப்பால் பாலைவனமும்

 சோலைவனமாகும் அதற்கு அமீரகமே

சாட்சி. 



2 comments:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...