Friday, April 14, 2023

தேநீர் தேநீர் by Vidhya Nivash

 


தேனீக்கு தேநீர் குடிக்க யாரும் கற்றுத்தரவில்லை இல்லையேல் அதுவும் மலர்களை புறக்கணித்து தேநீர் கடைக்கு படை எடுத்திருக்கும்..

அலுப்பைப் போக்க தேநீரா தெரியவில்லை அந்த மணியை கடந்தும் உனை அருந்தவில்லை என்றால் எதையோ இழந்த மாதிரி உனக்கு அடிமையானோம்..

பலருக்கு மூன்று வேளையும் உணவே நீ தான்..

தேநீரில் ரகங்கள் பலவிதம் ,குடிப்பவரின் ரசனையும் பலவிதம்..

ஆசையாக வாங்கிய தேநீர் பார்க்க அழகு குடிக்க ?

சுடச்சுட ஆவி பறக்க அதை ஊதி குடிப்பதே இல்லை ரசிப்பதே சுகம் அதுவும் தனிமையில் ஒரு விதமான ஆழ்ந்த நிலை சிந்தனைகளின் பிறப்பிடம்.. ஆறிப்போன பின் அதற்கு மவுசில்லை.



6 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...