Sunday, April 30, 2023

ஓவின் புத்தாண்டு விழா by Vidhya Nivash


அற்புதமான அனுபவம் கிராமத்தையே

 நகரத்திற்கு இல்லை இல்லை 

அமீரகத்திற்கு கொண்டு வந்த ஓடி

 விளையாடு குழுவிற்கு மனமார்ந்த

 நன்றிகள் பல.இதோ எங்களை

 அதிசயித்தவை முதலில்  எளிமை

 எளிமையிலும் புதுமை தமிழர்

 களுக்கே உரித்தான உபசரிப்பு

மிகவும் கவர்ந்தது.

 வண்ணச்சாயங்களால் அடையலமே 

தெரியாமல் போகும் மாதிரி 

கலைநிகழ்ச்சிகளையே கண்ட 

கண்களுக்கு முதன்முறையாக 

அதிசயம் இயற்கையான அழகில் 

தங்கள் திறமைகளை 

வெளிப்படுத்திய பட்டாம்ப்பூச்சிகள் 

அவர்கள் தேர்வுச்செய்த பாடல்களும் 

எங்களை அறியாமல் முணுமுணுக்க

 செய்தது .முத்தான பழைய நெஞ்சை 

கவர்ந்த பாடல்கள்..

வில்லுப்பாட்டு,கரகம்,காவடி,சிலம்பம்,

பறை,பட்டிமன்றம் என திரைகளிலே 

பார்த்து ரசித்த அனைத்து 

நிகழ்ச்சிகளையும் கண் முன்னே 

கொண்டு வந்து கிராமத்திற்கு 

அழைத்துச் சென்றனர்.

மொட்டு வெடிக்க துடிக்கும் அரும்புகள்

அதற்கு சரியான சூழ்நிலையை 

உருவாக்கி தந்த பெற்றோரும் 

ஆசிரியரும்.படைப்புகளின் 

குவியலாக அவர்களின் முதல் தமிழ் 

இதழை கையில் வாங்கும் போது 

அமீரகத்தில் தமிழ் இதழை கண்டு 

பூரித்துப்போனது. 

மொத்தத்தில் கடின உழைப்பின் 

வெற்றியை கண்ணில் கண்டோம். 

பம்பரமாக சுழலும் மங்கையர் அதற்கு 

அடித்தளமாக நின்ற ஆண்மக்கள் 

நீங்கள் மேன்மேலும் வளர 

விண்மீன்கள் குழுச்சார்ப்பாக 

மனமார்ந்த வாழ்த்துக்கள் பல.

இதை சொல்ல மறந்தால் என்ன 

ஆவது பாயசத்திற்கு ருசிக்கூட்டும் 

முந்தரியும் திராட்சையும் போல் 

மன்னர் மற்றும் மந்திரியின் 

யதார்த்தமான கலந்துரையாடலும் 

நடிப்பும் அரங்கையே சிரிப்பலை 

வீசச்செய்தது.

பூந்தோட்டத்தை சுற்றும் வண்டு போல் 

தந்தைமார்களும் தங்கள் அரும்புக்கு 

எந்த விதத்திலும் குறைந்தவர்கள் 

அல்ல என்று ஆடி அசத்திய 

தாய்மார்களும்...மொத்தத்தில் 

அமீரகத்தில் கிராமத்து மண் 

வாசனையை நுகரச் செய்தனர் 

ஓடிவிளையாடு குழுவினர்.


2 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...