ஆரஞ்சு வெள்ளை
நிறத்தில் வேறு,
சுவையில் கொஞ்சமே வித்தியாசம்,
குணத்தில் ஒன்று,
உயரத்தில் சரி சமம்,
ஒன்று இயற்கையான சுவை,
மற்றொன்று சுவைக்கூட்ட
செயற்கையாக சேர்க்கப்பட்டது,
இரண்டும் திரவ நிலை,
இரண்டின் பண்பும் ஒன்றே,
ஒன்று நேரடியாக கிடைத்தது
புளித்தால் வேறு பயன்,
மற்றொன்று புளித்தால் மட்டுமே
கிடைக்கும் கொஞ்சம் பதம்
தவறினாலும் பயனற்றது ,
கிட்டத்தட்ட ஏழு பொருத்தம் இரண்டும்
ஒன்றாக கலக்கலாம், கலந்தாலும்
இரண்டும் தனித்தன்மை வாய்ந்தது
இல்ல ..
இது புரிந்தால் போதுமில்ல!

அருமை வித்யா
ReplyDeleteநன்றி வீணா
ReplyDelete